"தொடங்கியது குளிர்கால கூட்ட தொடர்" - சில நிமிடத்தில் மக்களவை ஒத்தி வைப்பு

Asianet News Tamil  
Published : Nov 16, 2016, 06:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
"தொடங்கியது குளிர்கால கூட்ட தொடர்" - சில நிமிடத்தில் மக்களவை ஒத்தி வைப்பு

சுருக்கம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத் தொடர் தொடங்கியது. மக்களவையில் அமீத்அன்சாரி, மாநிலங்களவையில் சுமித்ரா மகாஜன் ஆகியோர் தலைமையில் தொடங்கியது. முன்னதாக, மறைந்த உறுப்பினர்களுக்கு இரு அவையிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மக்களவையை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இதில், கருப்பு பணத்தை முடக்குவதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கை, கையில் மை வைப்பது, பணத்தட்டுப்பாடு உள்பட பல்வேறு கேள்கிகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. இதனால், இன்று நடக்கும் விவாதத்தின் போது, பெரும் பரபரப்பு நிலவும் என எதிர் பார்க்கப்படுகிறது.

நாடாளுமன் கூட்ட தொடருக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், குளிர் கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. இதில் நல்ல விவாதங்கள் நடக்கும் என எதிர் பார்க்கிறோம். சாமான்ய மக்களின் பிரச்சனைகளை தீர்க்க, அனைத்து கட்சியினரும் புதிய யோசனைகளை கூறலாம் என்றார்.

PREV
click me!

Recommended Stories

நாங்க கிராமத்தான் இல்ல, மிலிட்டரி காரண்டா..! கிராம மக்களுக்கு ராணுவ பயிற்சி.. மோடி அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக்
செம காண்டு.. கழுதைய வச்சு இழுத்தும் யூஸ் இல்ல.. ஷோரூம் முன்பே ஆட்டோவை கொளுத்திய இளைஞர்!