இன்சூரன்ஸ் துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

Published : Dec 17, 2025, 10:16 PM IST
 Term Insurance

சுருக்கம்

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட காப்பீட்டுச் சட்டத் திருத்த மசோதா 2025, காப்பீட்டுத் துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கிறது. இதனால் பொதுத்துறை நிறுவனங்கள் பலவீனமடையும் என எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.

மக்களவையைத் தொடர்ந்து, 'சப்கா பீமா சப்கா ரக்ஷா' என்ற காப்பீட்டுச் சட்டத் திருத்த மசோதா - 2025 புதன்கிழமை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இத்துடன், காலாவதியான 71 பழைய சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

100% நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI)

காப்பீட்டுத் துறையில் இனி 100% வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படும். இதன் மூலம் கூடுதல் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரும், போட்டி அதிகரிக்கும் மற்றும் காப்பீட்டு பிரீமியக் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியர்களிடமிருந்து வசூலிக்கும் பிரீமியம் தொகையை இந்தியாவிலேயே வைத்திருக்க வேண்டும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

அரசு நடத்தும் சமூக நலத்திட்டங்கள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு

இந்த மசோதா காப்பீட்டுத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இதை நாடாளுமன்றக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரின.

வெளிநாட்டு நிறுவனங்கள் பான் (PAN) மற்றும் ஆதார் எண்களைக் கேட்பது டிஜிட்டல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் என காங்கிரஸ் எம்.பி. சக்திசிங் கோகில் எச்சரித்தார்.

பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பாதிப்பு

இந்த மசோதா மூலம் 600 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் செல்லும் என்றும், இது அரசு பொதுத்துறை நிறுவனங்களை (PSU) பலவீனப்படுத்தும் என்றும் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு தெரிவித்தார்.

மசோதாவின் பெயரில் இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்திருப்பதை திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்தது.

71 பழைய சட்டங்கள் ரத்து

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்த 'திருத்தம் மற்றும் நீக்குதல் மசோதா' மூலம் இந்திய டிராம்வே சட்டம் 1886, இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 உள்ளிட்ட 71 பழமையான சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

"காலனித்துவ கால மனநிலையிலிருந்து விடுபடவும், எளிதான வாழ்க்கையை (Ease of Living) உறுதிப்படுத்தவும் இந்த சீர்திருத்தங்கள் அவசியம்," என அமைச்சர் குறிப்பிட்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Travel Hack: ₹500-க்கு கோவாவை சுத்தி பார்க்கலாம்! இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடகைக்கு எடுங்க!
Gold Price Hike: விண்ணை முட்டும் தங்கம் விலை.! இறக்குமதி வரி 15% உயர்வு! இனி தங்கம் வாங்க முடியுமா?