பிரதமர் அலுவலக வளாகத்தில் இரண்டு பருந்துகள்; அலறிய பாதுகாப்பு அதிகாரிகள்; காரணம் என்ன?

Published : May 17, 2023, 04:56 PM IST
பிரதமர் அலுவலக வளாகத்தில் இரண்டு பருந்துகள்; அலறிய பாதுகாப்பு அதிகாரிகள்; காரணம் என்ன?

சுருக்கம்

டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலக வளாகத்தில் பறக்க முடியாத நிலையில் இரண்டு கருப்பு பருந்துகள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலக வளாகத்தில் பறக்க முடியாத நிலையில் இரண்டு கருப்பு பருந்துகள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு உதவ தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொண்ட மீட்புக் குழு அந்த இடத்தை அடைந்தது. நிலைமையை கவனமாக மதிப்பிட்ட பிறகு, பறவைகள் கடுமையான நீரிழப்புடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து பருந்துகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: லேடி சிங்கம் என்று அழைக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி விபத்தில் உயிரிழப்பு.. யார் இந்த ஜுன்மோனி ரபா?

பின்னர் அவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது அவை மருத்துவ கண்காணிப்பில் உள்ளன. கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையின் பிறகு அவை விடுவிக்கப்படும். இதுக்குறித்து வனவிலங்கு SOS அதிகாரிகள் கூறுகையில், கருப்பு பருந்துகள் போன்ற ராப்டர்கள் அதிக உயரத்தில் பறக்கின்றன. அதனால் வெப்பம் தாளாமல் வெப்ப பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: சிட்னி செல்லும்போது நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்! பல பயணிகளுக்குக் காயம்

எனவே, கோடை காலத்தில் இந்த பறவைகளுக்கு இது ஒரு முக்கியமான சூழ்நிலை. இந்த பறவைகளுக்கு தங்களின் இரக்கத்தை வெளிப்படுத்தியதற்காகவும், இந்த அவசரநிலை குறித்து வனவிலங்கு SOSஐ எச்சரித்ததற்காகவும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். குடிமக்கள் களைத்துப்போன பறவைகளைக் காணக்கூடிய இதுபோன்ற காட்சிகளைக் கண்காணிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!