மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்; இந்திய வீரர்கள் ‘தகுந்த’ பதிலடி

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 10:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்; இந்திய வீரர்கள் ‘தகுந்த’ பதிலடி

சுருக்கம்


ஜம்மு, அக்.19-

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இரவில் தாக்குதல்

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுத்தின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடவடிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டம், நவுஷெரா லாம் பட்டாலியன் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதல் நடத்தினார்கள்.

பதிலடி

துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் நடந்த இந்த தாக்குதல் நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது.

எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் திருப்பித் தாக்கி தக்க பதிலடி கொடுத்ததாக. இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

29-வது முறையாக

இந்திய ராணுவத்தின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடவடிக்கைக்குப்பின், பாகிஸ்தான் ராணுவத்தின் 29-வது போர் நிறுத்த ஒப்பந்த மீறலாகும் இது.

PREV
click me!

Recommended Stories

கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் மாசு ஏற்படுத்திவிட்டு புனித நதி என்று எப்படி அழைக்க முடியும்? சொல்வது யார் தெரியுமா?
கைகூப்பி மன்னிப்பு.. திமுக., எதிர்க்கட்சிகளுக்கு அனல் பறக்க எச்சரிக்கை..! மோடியின் பரபரப்பு ஸ்பீச்..