சாதி, மத பாகுபாடு இல்லாத ஆட்சி தான் வேணும்! அது யோகி ஆதித்யநாத்தால் மட்டும்தான் முடியும்! உ.பி., மக்கள் ஆதரவு

By karthikeyan VFirst Published Aug 18, 2021, 5:55 PM IST
Highlights

சாதி, மத பாகுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரையும் ஒரே மாதிரி நடத்துபவர்களின் ஆட்சியையே தாங்கள் விரும்புவதாக உத்தர பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அடுத்த ஆண்டு முடிவுக்கு வருகிறது. 

இதையடுத்து அடுத்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஏசியாநெட் சார்பில் சர்வே எடுக்கப்பட்டது. கான்பூர், மேற்குப்பகுதி, ஆவாத், ப்ரிஜ், காசி மற்றும் கோரக்‌ஷ் ஆகிய 6 மண்டலங்களில் கடந்த ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை 4200 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள், எந்த ஆட்சி அமைவது உத்தர பிரதேச மாநிலத்துக்கு நல்லது, எந்தெந்த விவகாரங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும், யோகி ஆதித்யநாத் ஆட்சி மீதான மதிப்பீடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த சர்வேயில், 48% பேர் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மீண்டும் அமைய வேண்டும் என்றும், 40% பேர் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாகவும் கருத்து கூறியுள்ளனர்.

யோகி ஆதித்யநாத் அரசு கொரோனா பெருந்தொற்று காலத்தை எப்படி கையாண்டது என்ற கேள்விக்கு, 23% பேர் மிகச்சிறப்பு என்றும், 22% பேர் சிறப்பாக என்றும் கருத்து கூறினர். 32% பேர் பரவாயில்லை என்றும், 13% பேர் மட்டுமே மோசம் என்றும் கருத்து கூறினர்.  

இந்த சர்வேயில், மதச்சார்பின்மை குறித்த மக்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் விதமான கேள்வி முன்வைக்கப்பட்டது. எந்த மாதிரியான அரசாங்கம் உத்தர பிரதேசத்தி அமைய வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, சாதி, மத வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒரே மாதிரியாக பாவிக்கும் ஆட்சிதான் வேண்டும் என்று 92% பேரும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சாதகமான ஆட்சிதான் வேண்டும் என்று வெறும் 8% பேர் மட்டுமே கருத்து கூறியுள்ளனர்.

சாதி, மத பேதம் பார்க்காத ஆட்சி தான் அமையவேண்டும் என்ற விருப்பத்தை ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தியுள்ள உத்தர பிரதேச மக்கள், மீண்டும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமையவேண்டும் என்று கூறியிருப்பது, அவர் சாதி, மத பேதமற்ற, அனைவருக்குமான ஆட்சியை கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தான், யோகி தலைமையிலான பாஜக ஆட்சியே மீண்டும் அமையவேண்டும் என்றும் கருத்து கூறியுள்ளனர்.

சாதி வாரியாக கருத்து கேட்கும்போது கூட, யாதவ் சமுதாய மக்கள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 90% ஆதரவை தெரிவித்தனர். ஆனால் யாதவ் அல்லாத ஓபிசி பிரிவினரில் 70% பேர் பாஜகவுக்கே ஆதரவு தெரிவித்தனர். இதன்மூலம் சமாஜ்வாதி கட்சியை சாதி கட்சியாகவும், பாஜகவை அனைவருக்குமான கட்சியாகவும் உத்தர பிரதேச மக்கள் பார்ப்பது புலப்படுகிறது.
 

click me!