தமிழகத்தை அடுத்து விசாகப்பட்டினத்தை குறி வைக்கும் நியூட்ரினோ திட்டம்...! - மத்திய அரசின் அடுத்த ப்ளான்!!

Asianet News Tamil  
Published : Jun 15, 2017, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
தமிழகத்தை அடுத்து விசாகப்பட்டினத்தை குறி வைக்கும் நியூட்ரினோ திட்டம்...! - மத்திய அரசின் அடுத்த ப்ளான்!!

சுருக்கம்

nutrino project in visakhapatnam

தமிழகத்தில் அமைக்கப்படவிருந்த நியூட்ரினோ திட்டம் ஆந்திர மாநிலத்துக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் நியூட்டினோ ஆய்வகம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

அதுமட்டுமன்றி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்ததை ரத்து செய்து தேசிய தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், நியூட்ரினோ திட்டத்தை இடமாற்றம் செய்யப்படுவதாக, அதன் இயக்குநர் விவேக் டாடர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வகம், தமிழகத்தில் இருந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கொத்தாபெல்லாம் என்ற இடத்தில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!
Hormuz Crisis: இந்த தீவுப் பக்கமே போகாதீங்க! இந்திய கப்பல்களுக்கு நேவி போட்ட புதிய உத்தரவு