ஜூன் 30 வரை ரெயில் டிக்கெட் உயராதா? ஏன்? புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்தியஅரசு...

Asianet News Tamil  
Published : Apr 01, 2017, 05:38 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
ஜூன் 30 வரை ரெயில் டிக்கெட் உயராதா? ஏன்? புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்தியஅரசு...

சுருக்கம்

No service charge on train e-ticket till June 30

இன்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யப்படும், ரெயில் டிக்கெட்டுகளுக்கு ஜூன் 30-ந் தேதி வரை சேவை வரி பிடித்தம் செய்யப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்களிடையே டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும், மக்களுக்கு சலுகை அளிக்கும் வகையிலும், சேவைக்கட்டணத்தை கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதியில் இருந்து 2017,மார்ச் 31-ந்தேதிவரை ரத்து செய்வதாக அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில், அந்த தேதியை ஜூன் 30வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரை டிக்கெட் கட்டணம் உயராது என நம்பலாம்.

இது குறித்து ரெயில்வே துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடம் இருந்து, ஜூன் 30-ந்தேதி வரை சேவைக்கட்டணம் பயணிகளிடம் இருந்து ஆன்-லைன் முன்பதிவுக்கு வாங்க வேண்டாம் என உத்தரவு வந்தது. இதையடுத்து, ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவுக்கு நாங்கள் சேவைக்கட்டணத்தை ஜூன் 30வரை வசூலிக்கப்போவதில்லை’’ எனத் தெரிவித்தார். 

 ரெயில் டிக்கெட் முன்பதிவின் போது சேவைக்கட்டணமாக ரூ. 20 முதல் ரூ.40 வரை வசூலிக்கப்படுவது ஜூன் மாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் உயர்வு அடுத்த 2 மாதங்களுக்கு இருக்காது. சேவைக்கட்டணத்தை ரத்து செய்ததன் மூலம், நவம்பர் 23 முதல் பிப்ரவரி 28வரை ரூ.184 கோடிவரை பயணிகளுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!
I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!