மகாராஷ்டிராவில் புதிய வகை கொரோனா; புனே, தானேவில் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை!

Published : Aug 08, 2023, 12:44 PM IST
மகாராஷ்டிராவில் புதிய வகை கொரோனா; புனே, தானேவில் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை!

சுருக்கம்

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் பெருமூச்சு விட்டு வரும் நிலையில் மீண்டும் புதிய வகை கொரோனா மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் 2019ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று பரவி கொத்து கொத்தாக சில நாடுகளில் மக்கள் மடிந்தார்கள். ஏறக்குறையை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் கொரோனாவில் இருந்து விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய வகை EG.5.1 என்ற கொரோனா பரவி வருவது மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த வகை கொரோனா மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மரபணு ஆய்வில் ஈடுபட்டு வரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவரும், பிஜெ மருத்துவக் கல்லூரியின் மூத்த அறிவியல் விஞ்ஞானியுமான ராஜேஷ் கார்யகர்தே டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்திருக்கும் பேட்டியில், ''மகாராஷ்டிரா மாநிலத்தில் EG.5.1 வகை கொரோனா கடந்த மே மாதத்திலேயே கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு மாதங்கள் ஆன பின்னரும், ஜூன், ஜூலை மாதங்களில் இந்த வகை தொற்று பரவவில்லை. இந்த நிலையில் XBB.1.16 மற்றும் XBB.2.3 வகை கொரோனாவும் இன்னும் பரவி வருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களிடையே மாரடைப்பு பாதிப்பு 22% அதிகரிப்பு.. பெண்களுக்கு தான் அதிக பாதிப்பு.. மருத்துவர் எச்சரிக்கை

மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அறிக்கையின்படி, ஜூலை மாத இறுதியில் 70ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை ஆகஸ்ட் ஆறாம் தேதி 115 ஆக அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திங்கள் கிழமை இந்த மாநிலத்தில் கொரோனா எண்ணிக்கை 109 ஆக இருந்தது.

தற்போது பிரிட்டனில் EG.5.1 வகை கொரோனா பெரிய அளவில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனாவுக்கு பிரிட்டன் அரசு எரிஸ் என்று பெயரிட்டுள்ளது. இந்த வகை கொரோனா தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே மகாராஷ்டிராவில் காணப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

திடீர் மாரடைப்பு: தூக்கத்தில் ஏன் இறப்பு ஏற்படுகிறது? இந்த இதய நிலையை எப்படி தடுப்பது?

''ஒமிக்ரான் XBB.1.9-ல் இருந்து பிறழ்ந்து வந்ததுதான் E.G.5.1 வகை கொரோனா. இந்தியாவில் பெரிய அளவில் இந்த வகை கொரோனா பரவவில்லை. ஆனாலும், தொடர்ந்து எண்ணிக்கையை கவனித்து வருகிறோம்'' என்று மருத்துவர் கார்யகர்த்தே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே, தானே ஆகிய இடங்களில் இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!