ஜி-20 தலைமையை நாளை ஏற்கிறது இந்தியா... நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்கள் ஒளிரவிட ஏற்பாடு!!

Published : Nov 30, 2022, 11:44 PM IST
ஜி-20 தலைமையை நாளை ஏற்கிறது இந்தியா... நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்கள் ஒளிரவிட ஏற்பாடு!!

சுருக்கம்

ஜி-20 தலைமையை நாளை இந்தியா ஏற்க உள்ளதை அடுத்து நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்களை ஒளிரவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஜி-20 தலைமையை நாளை இந்தியா ஏற்க உள்ளதை அடுத்து நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்களை ஒளிரவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்மையில் இந்தோனேசியாவில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி, அடுத்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (டிச. 1) அதிகாரபூர்வ முறைப்படி ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இதற்காக நாடு முழுவதும் 100 நினைவுச் சின்னங்களை ஜி-20 லோகோவால் ஒளிரச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறை, சிகரெட்… பெங்களூர் பள்ளியில் மேற்கொண்ட சோதனையின் போது அதிர்ச்சி!!

அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதனால் அதற்கு முன்னதாக நாடு முழுவதும் 50 நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன. முதன் முதலாக ஜி-20 ஷெர்பா கூட்டம் உதய்பூரில் டிசம்பர் 4 முதல் 7ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் ஜி-20 மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் வரும் டிச.5 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. 

இதையும் படிங்க: 2021-22 ஜூலை-செப். காலாண்டில் ஜிடிபி 8.4 சதவீதம் அதிகரிப்பு… என்.எஸ்.ஓ (NSO) வெளியிட்ட அறிக்கையில் தகவல்!!

இதனிடையே ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக பல்வேறு துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அதனுடன் சுற்றுலா, கலாசாரம் மற்றும் திருவிழாக்கள் ஆகியவை ஜி-20 நிகழ்வுகளுடன் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஜி-20 என்ற மாபெரும் நிகழ்வின் மூலம் பிராண்ட் இந்தியா விளம்பரப்படுத்தப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!