நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி - பிரதமர் மோடி கடும் கண்டனம்

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 01:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி - பிரதமர் மோடி கடும் கண்டனம்

சுருக்கம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், இதனை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி, "நாடாளுமன்ற இரு அவைகளிலும், முக்கியப் பணிகள் எதுவும் செய்ய முடியாத வகையிலும், ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது குறித்து விவாதம் நடத்த முடியாமலும் அமளியில் ஈடுபட்டு வரும் எதிரக்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு ஆப்பு! சம்பளத்தில் கை வைக்கும் அரசு! முதல்வர் அதிரடி சரவெடி
சீனாவுக்கு பாகிஸ்தான் கொடுத்த இல்லீகல் 'கிஃப்ட்'..! இந்தியாவிற்கு புண்ணாக மாறிய வஞ்சகம்..!