பாஜகவின் ராஜதந்திரத்தை முறியடிக்க மீரா குமார் மிகச் சரியான தேர்வு - திருமாவளவன் பாராட்டு..

Asianet News Tamil  
Published : Jun 23, 2017, 09:35 AM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
பாஜகவின் ராஜதந்திரத்தை முறியடிக்க மீரா குமார் மிகச் சரியான தேர்வு - திருமாவளவன் பாராட்டு..

சுருக்கம்

Meera Kumar is the perfect choice to break the BJP diplomacy

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் மீரா குமார் மிகச்சரியான தேர்வு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வரும் 17 ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியைச் சேர்ந்தவர் என்றும் நாட்டின் உயரிய பதவிக்கு அவர் தகுதியற்றவர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் ராம்நாத் தலித்தாக இருந்தாலும் தலித்துகளுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்த திருமா, இப் பிரச்சனையில் பாஜக நாடகமாடுகிறது என தெரிவித்தார்.

இதனிடையே  மீராகுமாரின் தேர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் ராஜதந்திரத்தை முறியடிக்க மீரா குமார்தான் தான் சரியான தேர்வு என்று தெரிவித்தார்.

மேலும், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் நிலைப்பாடு வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

Union Budget 2026: இந்த முறையும் ஊழியர்களுக்கு Income Tax-ல் பெரிய நன்மையா? பட்ஜெட் எதிர்பார்ப்பு என்ன?
மகாராஷ்டிரா துணை முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. 5 மணிக்கு பதவியேற்பு... ஒன்றிணையும் NCP..!