மத்திய அமைச்சர் வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. மோதல்களால் கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர் !

Published : Jun 16, 2023, 09:16 AM IST
மத்திய அமைச்சர் வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. மோதல்களால் கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர் !

சுருக்கம்

மணிப்பூர் வன்முறையில் இம்பாலில் உள்ள மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீடு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்த சமீபத்திய வன்முறை சம்பவத்தில், இம்பாலில் உள்ள மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

இச்சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நடந்த போது மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வார தொடக்கத்தில், மாநில அமைச்சரும் பாஜக தலைவருமான நெம்சா கிப்கெனின் வீடும் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்டது.

இதற்கிடையில், மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங், அரசு பல மட்டங்களில் விவாதங்களை நடத்தி வருவதாகவும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். மணிப்பூரில் புதன்கிழமை பதிவான புதிய வன்முறை வழக்கில், ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், " நாங்கள் அனைவரையும் தொடர்பு கொள்கிறோம், நாங்கள் பல்வேறு மட்டங்களில் விவாதிக்கிறோம். கவர்னர் ஒரு அமைதிக் குழுவை அமைத்துள்ளார். மேலும் அமைதிக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை தொடங்கும். நான் நம்புகிறேன். மாநில மக்களின் ஆதரவுடன் கூடிய விரைவில் அமைதியை அடைவோம்" என்றார்.

1 லட்சம் பேர் இடமாற்றம்.. 950 கிராமத்தில் மின்சாரம் கட்! பைபர்ஜாய் புயலின் ருத்ர தாண்டவம் எப்போது முடியும்.?

திடீரென நிலைமை சீராகும் என்று கூறுவது எளிதல்ல என்றும், ஆனால் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் குறைந்து வருவதாகவும் என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர், "ஒருவர் தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்ததால் பெரும்பாலானவர்களுக்கு சில உணர்வுகள் இருக்கும். யாரோ ஒருவர் தங்கள் சொத்துக்களை இழந்திருக்கிறார்கள். அதனால், அந்த வகையான உணர்ச்சிகள் உள்ளன.

எனவே, எல்லாம் சரியாகிவிடும் என்று நாங்கள் உடனடியாக சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் அதைப் பார்த்தீர்கள். அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம், அது குறைகிறது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை தொடங்கியுள்ளது. மாநில மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன், நாட்டின் சட்டத்தின்படி குற்றவாளிகள் மீது கண்டிப்பாக வழக்கு பதிவு செய்வோம்” என்று கூறினார்.

பெண்களை முந்திய ஆண்கள்.. முதல் 50 இடங்களில் 10 மட்டுமே பெண்கள் - நீட் தேர்வு முடிவுகள் என்ன சொல்கிறது?

PREV
click me!

Recommended Stories

அமெரிக்க அதிபரையே மிஞ்சிய நம்ம பிரதமர்.. மோடி செய்த வரலாற்று சாதனை.. உலகமே வியக்குது
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க