
5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, மேற்கு வங்காள மாநிலத்திலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தின்போது நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியதாவது,
5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் யார், யாருக்கு தேவைப்படுகிறது என்று கேட்டறியாமல் திடீரென்று தன்னை கடவுளாக பாவித்துகொண்ட பிரதமர் மோடி,மக்களைப்பற்றி கவலைப்படாமல் இதைப்போன்ற தடாலடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நான் வாழ்கிறேனா, சாகிறேனா என்பது பிரச்சனையல்ல. ஆனால், இந்திய அரசியலில் இருந்து பிரதமர் மோடியை நீக்காமல் விடமாட்டேன் என்று ஆவேசமாக தெரிவித்தார்.