கேதர்நாத் யாத்திரைப் பாதையில் மிகப்பெரிய நிலச்சரிவு; பலர் புதைந்து இருக்கலாம் என அச்சம்!!

Published : Aug 04, 2023, 10:00 AM ISTUpdated : Aug 04, 2023, 10:16 AM IST
கேதர்நாத் யாத்திரைப் பாதையில் மிகப்பெரிய நிலச்சரிவு; பலர் புதைந்து இருக்கலாம் என அச்சம்!!

சுருக்கம்

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதர்நாத் யாத்திரைப் பாதையில் கௌரிகுந்த் அருகே ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் பலர் புதைந்து இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கேதர்நாத் யாத்திரை வழியில் பல கடைகள் இருந்துள்ளன. இந்தக் கடைகளும் புதைந்துள்ளன. இதனால், பலர் இடிந்த கடைகளின் இடிபாடுகளில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மாநில பேரிடர் மீட்புப் படை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ருத்ரபிரயாக் பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறுகையில், நிலச்சரிவில் 10 முதல் 12 பேர் புதையுண்டு இருக்கலாம் அல்லது அடித்து செல்லப்படலாம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். சாமோலி மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார், இந்த சோக சம்பவத்தை உறுதிப்படுத்தி உள்ளார். "கௌரி குண்ட் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று கடைகள் அடித்துச் செல்லப்பட்டதில் குறைந்தது 12 பேரை காணவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

பீர் பாட்டிலால் தாக்கி ரூ.4.5 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல்.. தக்காளி விவசாயிக்கு நேர்ந்த சோகம்.. 

சம்பவ இடத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படை குழுவினர், போலீசார், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாவட்ட நிர்வாகத்தினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து மேலும் ராஜவர் கூறுகையில், ''காணாமல் போனவர்கள் அனைவரும் கடைகளை நடத்தி வந்தவர்களாக இருக்கக் கூடும். யாத்திரை வந்தவர்கள் அல்ல'' என்று உறுதிபடுத்தியுள்ளார். உத்தரகண்ட் பகுதிகளில் கன மழை பெய்வதால் கேதர்நாத் யாத்திரை வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த விபத்தும் ஏற்பட்டுள்ளது. 

இந்துக் கடவுள்களுக்கு எதிராக உரையாற்றிய பேராசிரியர்.. மாணவர்கள் அளித்த புகார் - என்ன செய்தது கல்லூரி நிர்வாகம்

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்! அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு உத்தரவு!
மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!