வேன் மீது லாரி மோதி விபத்து... 11 பேர் உயிரிழப்பு!

Published : Dec 09, 2018, 11:42 AM IST
வேன் மீது லாரி மோதி விபத்து... 11 பேர் உயிரிழப்பு!

சுருக்கம்

மகாராஷ்ராவில் வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்ராவில் வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் சந்த்ராபூர் மாவட்டத்தில் சுமார் 15 பயணிகளை ஏற்றிக்கொண்டு வேன் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது கோர்பனா பகுதியில் நள்ளிரவில் வேன் வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி வேன் மீது மோதியது. இதில் பயணம் செய்த 7 பெண்கள், வேன் ஓட்டுநர், 3 வயது குழந்தை மற்றும் மற்றொரு நபர் என 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

படுகாயமடைந்த 4 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்