Lok Sabha Elections 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஏன் தவறாக அமைய வாய்ப்பு?

Published : May 31, 2024, 06:32 PM IST
Lok Sabha Elections 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஏன் தவறாக அமைய வாய்ப்பு?

சுருக்கம்

மக்களவைத் தேர்தல் 2024க்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாக அமையவும் சில வாய்ப்புகள் உள்ளன

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவுக்கு முடிந்த பின்னர், மாலை 6.30 மணிக்கு மேல் வெளியாகவுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாக அமையவும் சில வாய்ப்புகள் உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய Exit Polls எனப்படும் கருத்துக்கணிப்புகள், வாக்களர்களின் உணர்வில் சாத்தியமான சில விஷயங்களை எடுத்துரைத்தாலும், அவை துல்லியமாக இருக்க வாய்ப்பில்லை. வெளித்தோற்றத்தில் விஞ்ஞானப்பூர்வமாக இருந்தபோதிலும், பல காரணிகளால் கருத்துக்கணிப்புகள் மாற வாய்ப்புள்ளன.

தவறான தகவல்கள்


Opinion Pollsஐ விட Exit Polls துல்லியமாக இருப்பது போல தெரிந்தாலும் அதிலும் பிழைகள் இருக்கலாம். வாக்காளர் ஒருவர் தான் யாருக்கு வாக்களித்தோம் என்று அளிக்கும் பதிலை பொறுத்தே Exit Polls முடிவுகள் அமைகின்றன. ஒருவேளை அவர்கள் உண்மையை சொல்லாவிட்டால் கருத்துக்கணிப்பு முடிவுகளும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. சில தனிநபர்கள் வேண்டுமென்றே கருத்துக்கணிப்பாளர்களை ஏமாற்றலாம். மற்றவர்கள், குறிப்பாக, ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட சமூகங்கள், தங்கள் உண்மையான கருத்துக்களை வெளிப்படுத்துவதை அழுத்தமாக உணரலாம்.

கூடுதலாக, வாக்குச் சாவடிகளுக்கு வெளியே நடத்தப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பதிலளிப்பவர்கள் தங்கள் உண்மையான விருப்பங்களை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பதில்களை அளிக்க அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

கடுமையான போட்டி


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பொதுவாக 1% முதல் 3% வரையிலான பிழையுடன் வருகின்றன. 2018 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கடுமையான போட்டி நிலவியது. அப்போது வாக்கு பங்கு வித்தியாசமே 1 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தது. அதுபோன்ற சமயங்களில் 1 முதல் 3 சதவீதம் பிழையுடன் வரும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பொய்த்து போக வாய்ப்புள்ளது.

Lok Sabha elections 2024 தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு என்ன வித்தியாசம்?

செலவு குறைப்பு மற்றும் முறைசார் அழுத்தங்கள்


கருத்துக்கணிப்புகளுக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் மற்றும் நேரம் போன்றவை கருத்துக் கணிப்புகளின் தரத்தை சமரசம் செய்யலாம். பல ஊடக நிறுவனங்கள் குறைவான பட்ஜெட்டில் செயல்படுகின்றன. இது கருத்துக்கணிப்புகளின் ஆழமாக ஆராய்ச்சி மற்றும் தரவு சேகரிப்பின் முடிவுகளை பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும், முடிவுகளை உடனுக்குடன் வழங்குவதற்கான அழுத்தம், கணினி உதவியுடன் கூடிய தொலைபேசி நேர்காணல்கள் போன்ற குறுக்குவழிகளுக்கு வழிவகுக்கும். அதாவது செல்போனில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு அழைப்பு வருமே அதுபோன்று. இது கள நிலவரத்தை துல்லியமாக பிரதிபலிக்காது.

மாதிரி சேகரிப்பில் மனிதப் பிழைகள்


தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், மாதிரிகள் எடுப்பதில் மனிதர்களின் ஈடுபாடு பிழைகளுக்கு வழிவகுக்கலாம். வசதியான வாக்குச் சாவடிகளைத் தேர்ந்தெடுப்பது, அங்கு தரவுகளை சேகரிப்பது போன்றவை தவறான முடிவுகளை தரலாம். அதாவது குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் சில குறிப்பிட்ட சமூகங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் அங்கு சென்று தரவுகளை சேகரித்தால் முடிவுகள் வேறு விதமாக அமையலாம்.

வரலாற்றுத் தரவுகளின் மீதான நம்பிக்கை


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் வரலாற்றுத் தேர்தல் தரவுகளை பகுப்பாய்வுக்காக நம்பியிருக்கும். ஆனால், இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில், வளர்ந்து வரும் மக்கள்தொகை, வாக்குப்பதிவு முறைகள் போன்றவற்றால் வரலாற்றுத் தரவுகள் தற்போதைய உணர்வுகளின் துல்லியமான பிரதிநிதித்துவத்தை வழங்காது. மக்கள்தொகைப் பெருக்கம், வாக்காளர் பட்டியலில் மாற்றங்கள், வாக்குப்பதிவு மாற்றங்கள் போன்ற காரணிகள் கணிப்புகளை சிக்கலாக்கலாம்.

சாதி மற்றும் சமூக-பொருளாதார தரவுகள் இல்லாதது


சாதி மற்றும் சமூக-பொருளாதார மக்கள்தொகை பற்றிய விரிவான தரவுகள் இல்லாதது துல்லியமான கணக்கெடுப்புக்கு சவாலாக உள்ளது. கடைசியாக 1934ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, இது தேர்தல் முடிவுகளில் சாதிகளின் தாக்கத்தை மதிப்பிடுவதில் கடினத்தை ஏற்படுத்துகிறது. இதேபோல், வாக்காளர்களின் பொருளாதார விவரங்கள் குறித்த போதுமான தகவல்கள் இல்லாததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பாதிக்க வாய்ப்புள்ளது.

Exit Poll Result 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்போது? - முழு விவரம்!

பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லை


பெண் வாக்காளர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ள போதிலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பெண்கள் மக்கள்தொகையை போதுமான அளவில் குறிப்பிடுவதில்லை. மக்கள்தொகையில் பெண்கள் கிட்டத்தட்ட பாதியாக இருந்தாலும், கணக்கெடுப்புகளில் அவர்களின் மாதிரி அளவு பொதுவாக 25% முதல் 30% வரையே உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு, தேர்தல் முடிவுகளைக் கணிப்பதில் பிழைகளுக்கு வழிவகுக்கும், குறிப்பாக ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள தொகுதிகளில்.

முடிவாக, கருத்துக் கணிப்புகள் பொதுமக்களின் கருத்தை மதிப்பிடுவதற்கான மதிப்புமிக்க கருவிகளாக செயல்பட்டாலும், ​​அவற்றின் நம்பகத்தன்மை பல்வேறு வரம்புகள், காரணிகள், மற்றும் சவால்களுக்கு உட்பட்டது. சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்காக நாடு காத்திருக்கும் நிலையில், வாக்காளர்களின் நாடித் துடிப்பை எந்த கருத்துக்கணிப்பாளர் துல்லியமாகப் படம்பிடிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!