சிபிஐ நீதிமன்ற நீதிபதிக்கு அச்சுறுத்தல்… நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம்!!

By Narendran SFirst Published Aug 25, 2022, 7:18 PM IST
Highlights

அனுபிரதா வழக்கில் அசன்சோலில் உள்ள சிபிஐ நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வங்காளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 

அனுபிரதா வழக்கில் அசன்சோலில் உள்ள சிபிஐ நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வங்காளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதுக்குறித்த அவர்களது கடிதத்தில், நாங்கள் கல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பிற மாவட்ட நீதிமன்றங்களில் மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்களாக இருக்கிறோம். மேற்கு வங்காளத்தின் ஒரு உயர்மட்ட அரசியல்வாதியைப் பற்றிய நீதிமன்ற வழக்கு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்து பெரும் திகில் அடைந்துள்ளோம். இது நீதி வழங்கல் அமைப்பில் நேரடி மற்றும் வெட்கக்கேடான தாக்குதல்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி பாதுகாப்புப் படையில் மின்னல் வேகத்தில் ஓடும் முதோல் வேட்டை நாய்; இதன் சிறப்புக்கள் என்னென்ன?

அசன்சோலில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஸ்ரீ ராஜேஷ் சக்ரவர்த்திக்கு பாப்பா சாட்டர்ஜி சிபிஐ விசாரித்து வரும் பசுக் கடத்தல் வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அனுப்ரதா மோண்டலுக்கு ஜாமீன் வழங்கவில்லை என்றால் அந்த நீதிபதியின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகக் காட்டப்படும் என்று கடிதம் மூலம் நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்.  இது போன்ற சம்பவம் ஏற்கனவே மாவட்ட நீதிபதி பாஸ்சிம் பர்த்வானின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக ஸ்ரீ, அசன்சோல் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதி ராஜேஷ் சக்ரவர்த்தி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட அனுப்ரதா மோண்டல் பிர்பூம் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நபர், அவர் மாடு கடத்தல் வழக்கில் சிபிஐ காவலில் உள்ளார்.

இதையும் படிங்க: கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு

இவ்வாறான நிலையில் காவலில் இருக்கும் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியின் நலனுக்காக நீதித்துறை அதிகாரிகள் பயமுறுத்தப்படுவது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். கல்கத்தா உயர்நீதிமன்றம் மற்றும் மேற்கு வங்கத்தின் பிற மாவட்ட நீதிமன்றங்களின் பொது வழக்கறிஞர்களான நாங்கள் இத்தகைய உண்மைகளைப் பற்றி அறிந்ததும் மிகவும் கவலையடைகிறோம் மற்றும் நீதித்துறை மீதான இத்தகைய தாக்குதலைக் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், மேற்கு வங்கத்தில் இருந்து வேறு எந்த மாநிலத்துக்கும் மேற்படி வழக்கை மாற்றவும், நீதி நிர்வாகத்தில் தலையிடாமல் அல்லது தடைபடாமல, தவறு செய்பவர்கள் தகுந்த தண்டனை பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!