இன்னும் எத்தனதான் இருக்கு...? 3-வது வழக்கிலும் லாலு குற்றவாளி! சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!

 
Published : Jan 24, 2018, 11:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
இன்னும் எத்தனதான் இருக்கு...? 3-வது வழக்கிலும் லாலு குற்றவாளி! சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு!

சுருக்கம்

Lalu Prasad Yadav guilty The CBI court ruled

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் மீதான 3-வது வழக்கிலும் சிபிஐ நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.

பீகார் மாநில முதலமைச்சராக 1990 - 1997 வரை லாலு பதவி வகித்தபோது, கால்நடை தீவன திட்டத்தில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாலு மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

லாலு மீதான இந்த வழக்குகளை 1996 ஆம் ஆண்டு முதல் சிபிஐ விசாரித்து வருகிறது. இதன் முதல் வழக்கில் 2013 ஆம் ஆண்டு லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் லாலு அடைக்கப்பட்டார். இதன் பின்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அவர் ஜாமின் பெற்றார்.

இதன் 2-வது வழக்கில், தியோகர் மாவட்ட அரசு கஜானாவில் இருந்து சட்டவிரோதமாக ரூ.89.27 லட்சம் பரிமாற்றம் செய்த வழக்கில், லாலு, மற்றொரு முன்னாள் முதலமைச்சரான ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

லாலு மற்றும் 3 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட 16 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். லாலுவுக்கு மூன்றரை ஆண்டுக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், லாலு மற்றும் ஜெகன்நாத் மிஸ்ரா மீதான கால்நடை தீவன 3-வது ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. சிபிஐ நீதிமன்றம், லாலு குற்றவாளி என தீர்ப்பளித்தது. 

மற்றொரு முன்னாள் முதலமைச்சரான ஜெகன்நாத் மிஸ்ராவும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!