மாலத்தீவுக்கு பலத்த அடி.. லட்சத்தீவில் குவியும் மக்கள்.. பிரதமர் மோடியின் வருகைக்குப் பிறகு நடந்த மாற்றங்கள்!

By Raghupati RFirst Published Apr 6, 2024, 11:37 AM IST
Highlights

யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி சென்று வந்த பிறகு, லட்சத்தீவின் புகழ் தாறுமாறாக உலக அளவில் உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுகளுக்கு பயணம் செய்தார். அதற்கு பிறகு லட்சத்தீவு வருவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. லட்சத்தீவில் சில விமான நிறுவனங்கள் செயல்படுவதால், இந்தியாவுடனான இணைப்புச் சிக்கல் பற்றி, விமான இணைப்பு நெறிப்படுத்தப்பட்டால், அது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் என்று அங்கிருக்கும் சுற்றுலா அதிகாரிகள் கூறுகின்றனர்.

 இதற்கிடையில், மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி அமன் சிங், "நாங்கள் லட்சத்தீவுக்கு வர நீண்ட நாட்களாக விரும்பினோம். ஆனால் தீவு தொடர்புடைய பல கட்டுக்கதைகள் இருந்தன. ஆனால் பிரதமர் மோடியின் வருகையால் செல்வது சாத்தியமாகும்" என்று கூறினார்.

டெல்லியைச் சேர்ந்த மற்றொரு பயணியான சுமித் ஆனந்த், லட்சத்தீவுக்கு வர வேண்டும் என்ற ஆசை தனக்கு எப்போதும் இருப்பதாகவும், ஆனால் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த பிறகே அது உறுதியானது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக ஜனவரி 4 அன்று, வெளியுறவுத்துறை அமைச்சர் (இஏஎம்) எஸ் ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம், அதன் மகத்தான சுற்றுலாத் திறன் குறித்து உலக கவனத்தை ஈர்த்துள்ளது என்றார். "லட்சத்தீவுக்கு பயணம் செய்வதன் மூலம், பிரதமர் மோடி சுற்றுலாவுக்கான அதன் மகத்தான சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்தியுள்ளார்.

இது நம் அனைவருக்கும் ஒரு சிறந்த உத்வேகம். அதிக பார்வையாளர்கள் லட்சத்தீவுகளின் செழுமைக்கும், வளர்ச்சிக்கும் பங்களிப்பார்கள். அவர்கள் அதன் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை அனுபவிப்பார்கள்" என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி லட்சத்தீவில் உள்ள வெள்ளை கடற்கரைகள் மற்றும் அழகிய நீல வானம் மற்றும் கடல் ஆகியவற்றின் படங்களைப் பகிர்ந்து கொண்டார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட லட்சத்தீவு தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

543 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும். முதல் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

IRCTC Tour: கம்மி பட்ஜெட்டில் சுவிட்சர்லாந்து முதல் பிரான்ஸ் வரை ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டுமா?

click me!