அரசு பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்க அவசரச் சட்டம்: கேரள அரசு முடிவு!!

Published : Nov 09, 2022, 01:25 PM ISTUpdated : Nov 09, 2022, 01:52 PM IST
அரசு பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்க அவசரச் சட்டம்: கேரள அரசு முடிவு!!

சுருக்கம்

அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்கி அவசரச் சட்டம் கொண்டு வர கேரள அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. வேந்தர் பதவிக்கு கல்வித்துறையைச் சேர்ந்த நிபுணர் ஒருவரை நியமிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆரிப் முகமது கான், 11 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் சமீபத்தில் அனுப்பியிருந்தார். இதற்கு எதிராக துணை வேந்தர்கள் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகினர். இதையடுத்து, துணை வேந்தர்கள் நீதிமன்றத்தை அணுகி நோட்டீஸ் சட்டவிரோதமானது என்றும் செல்லாது என்றும் மனு தாக்கல் செய்து இருந்தனர். 

அரசியல் தலையீடா; நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார்; கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் சவால்!!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துணை வேந்தர்கள் பணியில் தொடரலாம் என்று தெரிவித்து இருந்தது. இதற்கிடையே செவ்வாய் கிழமை வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் வேந்தராக இருக்கும் ஆளுநர் துணை வேந்தர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. துணை வேந்தர்களுக்கு ஏற்கனவே ஷோ காஸ் நோட்டீசை ஆளுநர் அனுப்பி இருக்கிறார். அடுத்தது இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கும் வரை எந்த நடவடிக்கையும் துணை வேந்தர்கள் மீது எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

உச்சநீதிமன்றம் அக்டோபர் 21ஆம் தேதியன்று, ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் நியமனத்தை ரத்து செய்தது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பரிந்துரையின்படி, மாநிலத்தால் அமைக்கப்பட்ட கமிட்டி, பொறியியல் அறிவியல் துறையில் இருக்கும் பொருத்தமான மூன்று பேரை வேந்தருக்கு பரிந்துரைத்து இருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக ஒரே ஒரு பெயரை மட்டுமே பரிந்துரைத்து உள்ளனர். இதனால், துணை வேந்தரை நியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து இருந்தது.

Arif Khan:முற்றிய வார்த்தைப் போர்! அமைச்சர் பாலகோபாலை நீக்குங்கள்: பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் கடிதம்

அதன் அடிப்படையில், ஆரிப் முகமது கான், நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட துணை வேந்தர்கள்  மற்றும் மாநில தலைமைச் செயலர் உறுப்பினராக இருக்கும் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

நாங்க இருக்கோம்.. விமான பயணிகளுக்கு கைகொடுத்த ஏர் இந்தியா.. இனி நோ கவலை!
கோவா தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!