கர்நாடகாவில் மாணவர்களின் புத்தகப் பை எடை எவ்வளவு இருக்க வேண்டும்? கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Published : Jun 22, 2023, 03:50 PM IST
கர்நாடகாவில் மாணவர்களின் புத்தகப் பை எடை எவ்வளவு இருக்க வேண்டும்? கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

சுருக்கம்

மாணவர்களின் உடல் எடையில் புத்தகப் பையின் எடை 15%க்கும் மேல் இருக்கக் கூடாது என்று கர்நாடக அரசு பள்ளிகளுக்கு மீண்டும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பள்ளிப் பையின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட எடை மாணவர்களின் எடையில் 15 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு கர்நாடாக கல்வித்துறை புது உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளியும் கடைபிடிக்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் உள்ள பள்ளிகள் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுமாறு வலியுறுத்தி, கர்நாடகாவில் உள்ள பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை புதன்கிழமை பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டின் சுற்றறிக்கையை மீண்டும் வெளியிட்டது. உத்தரவை கண்டிப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று தொகுதி அளவிலான கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சுற்றறிக்கையின்படி, புத்தகப் பையின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட எடை மாணவர்களின் எடையில் 15 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 1 முதல் 2 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 1.5-2 கிலோவாகவும், 3 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  2 முதல் 3 கிலோவாகவும். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3 முதல் 4 கிலோவாகவும், 9 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 முதல் 5 கிலோவாகவும் புத்தகப் பை எடை இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!