Karnataka : யாத்திரையை கையில் எடுத்த பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம்..! கர்நாடகா தேர்தல் ரேஸில் முந்துவது யார்.?

Published : Feb 15, 2023, 05:33 PM IST
Karnataka : யாத்திரையை கையில் எடுத்த பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம்..! கர்நாடகா தேர்தல் ரேஸில் முந்துவது யார்.?

சுருக்கம்

கர்நாடக மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் ரதயாத்திரையை பாஜக தொடங்கவுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. எனவே இரண்டரை மாதங்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கி பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் ஆளும் பாஜகவும் பல்வேறு வியூகங்களை வகுத்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக பாஜக ரதயாத்திரையை மார்ச் 1 முதல் தொடங்கும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இந்த ரதயாத்திரை, ஆளும் பாஜக அரசின் சாதனைகளை, தேர்தலைச் சந்திக்கும் மாநிலத்தில் ஒவ்வொரு கட்டமாக எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க..NIA Raid : 40 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம் & பொருட்கள் என்னென்ன.? வெளியான தகவல்

இன்று (புதன்கிழமை) பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, கோவிட்-19க்குப் பிறகு மாநிலம் அதிகபட்ச ஜிஎஸ்டியை வசூலித்து வருகிறது. இலக்கை 23% தாண்டி உள்ளது. நாங்கள் ஏழைகளுக்கு ஆதரவாக நின்று ஆட்சியை தக்க வைப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மார்ச் 1 முதல் மாநிலத்தில் ரதயாத்திரை தொடங்கும்.

பாஜக தொண்டர்கள் கட்சிக்காக அயராது உழைக்க வேண்டும் என்றும் முதல்வர் பொம்மை அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களின் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளோம். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிதி வழங்கினோம்.

கர்நாடகாவில் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டு, அரசின் ஆதரவு தேவைப்படும் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் நாங்கள் உதவினோம். எங்கள் சாதனைகள் அனைத்தும் ரதயாத்திரையின் போது கர்நாடக மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று கூறினார். கர்நாடகாவில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் மாநிலம் முழுவதும் பிரமாண்ட பிரசாரத்திற்கு தயாராகி வருகின்றன. 

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா கையெழுத்திட்ட வாக்குறுதி அட்டைகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஜனதா தளத்தின் (மதச்சார்பற்ற) குமாரசாமி ஏற்கனவே மாநிலத்தில் பஞ்சரத்ன யாத்திரையை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..25 மாத திமுக ஆட்சி.? எடப்பாடி அலை வீசுது.! துணிவுடன் தேர்தலை சந்திக்கும் அதிமுக - ‘கலகல’ செல்லூர் ராஜு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!