கர்நாடகா காங்கிரஸ் செயல் தலைவர் துருவநாராயண் மாரடைப்பால் மரணம்; கட்சிக்கு பெரிய இழப்பு என ராகுல் காந்தி பதிவு!

Published : Mar 11, 2023, 01:57 PM IST
கர்நாடகா காங்கிரஸ் செயல் தலைவர் துருவநாராயண் மாரடைப்பால் மரணம்; கட்சிக்கு பெரிய இழப்பு என ராகுல் காந்தி பதிவு!

சுருக்கம்

கர்நாடகா காங்கிரஸ் செயல் தலைவர் ஆர். துருவநாராயண் மாரடைப்பால் இன்று காலமானார். 

மைசூரில் இருக்கும் தனது வீட்டில் நெஞ்சு வலி இருப்பதாக துருவநாராயண் தெரிவித்துள்ளார். உடனடியாக இவரை காரில் அமர வைத்து ஓட்டுநர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டிஆர்எம்எஸ் மருத்துவமனை டாக்டர் மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.

இவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், ''முன்னாள் எம்.பி., ஆர்.துருவநாராயணனின் திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. கடின உழைப்பாளி மற்றும் தாழ்மையான அடிமட்டத் தலைவர். அவர் என்எஸ்யுஐ மற்றும் இளைஞர் காங்கிரஸில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

"மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யும், கேபிசிசி செயல் தலைவருமான துருவ நாராயண் மாரடைப்பால் காலமானார். இது காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. மறைந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் இந்த துக்கத்தைத் தாங்கக் கூடிய வலிமையை பெற வேண்டும்” என்று கர்நாடக காங்கிரஸ் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவும் அக்கட்சித் தலைவரின் அகால மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பதிவில், ''கர்நாடக தலைவரும், முன்னாள் எம்.பி.யும், எனது அன்பு நண்பருமான ஆர். துருவநாராயணனின் துரதிர்ஷ்டவசமான மற்றும் அகால மறைவால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவர்கள் டிகே சிவகுமார், ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!
வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!