கர்நாடக மாநிலத்தின் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

08:30 PM (IST) May 10
கர்நாடகா எக்சிட் போல் 2023ல் பாஜக, காங்கிரஸ், ஜேடி(எஸ்) ஆகியவற்றின் முழுமையான கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்க்கலாம்.
07:42 PM (IST) May 10
கர்நாடகாவில் தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த எக்சிட் போலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது. ஜன் கி பாத் - ஏசியாநெட்டின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு பற்றி இங்கு காணலாம்.
07:41 PM (IST) May 10
கர்நாடகாவில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
04:02 PM (IST) May 10
கர்நாடக மாநிலம் எல்லப்பூரில் 100 வயதான மூதாட்டி சுப்பக்கா கோமாரா நேரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.
80 வயதைக் கடந்தவர்கள் விரும்பினால் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வசதி இந்தத் தேர்தலில் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
03:51 PM (IST) May 10
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 9 மணி வரையான முதல் இரண்டு மணிநேரத்தில் 7.83 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகளும் பகல் 1 மணி நிலவரப்படி 44.16 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் சுமார் 2 மணி நேரம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
03:42 PM (IST) May 10
கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து, CVoter, Lokniti-CSDS, Axis My India மற்றும் Today's Chanakya உள்ளிட்ட பல ஏஜென்சிகள், தொலைக்காட்சி சேனல்களில் தங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக் காத்திருக்கின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் போட்டி நிலவுகிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், நடைபெறும் தேர்தல் என்பதால் காங்கிரஸ் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
03:29 PM (IST) May 10
செவ்வாய்க்கிழமை இரவு மங்களூரு வடக்கு பகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் பி ஏ மொகிதீன் பாவாவின் ஆதரவாளர்கள் தங்களைத் தாக்கியதாக காங்கிரஸ் தொண்டர்கள் பாஜ்பே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதற்கு ஜேடிஎஸ் தரப்பிலும் எதிர்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த நிஜாம், ஹஷர் ஆகிய இரண்டு காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
03:21 PM (IST) May 10
பெங்களூருவின் நெலமங்களாவில் டாக்டர் சின்மயி - மனோஜ்குமார் ஜோடி திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்களித்தனர்.
03:16 PM (IST) May 10
"அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து காஸ் சிலிண்டர்களைப் ஒரு முறை பார்த்துவிட்டு வாக்களிக்கவும். வாக்குச்சாவடிக்கு வெளியே ஒரு காஸ் சிலிண்டரை வைத்து அதற்கு மாலை அணிவிக்குமாறு எங்கள் கட்டியினரை அறிவுறுத்தியுள்ளேன்" என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பாஜக அரசு தவறிவிட்டதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
02:58 PM (IST) May 10
கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா பாஜக தெளிவான பெரும்பான்மையைப் பெறும் என்றும் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளிலேயே அதைப் பார்க்க முடியும் என்றும் கூறியுள்ளார். சிவமோகா மாவட்டம் ஷிகாரிபுரா நகரில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார். அப்போது ஷிகாரிபுராவில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திராவும் உடன் இருந்தார்.
02:50 PM (IST) May 10
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 60 சதவீத வாக்குகளைப் பெற்று 130 முதல் 160 இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். வருணாவில் வாக்களிக்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, மாநிலத்தில் காங்கிரஸ் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். "வாக்களிப்பதில் உற்சாகம் தெரிகிறது. பாராட்டுக்குரிய வகையில் வாக்குப்பதிவுக்கு அதிக அளவு மக்கள் வருகை தந்துகொண்டிருக்கின்றனர்" என்று அவர் கூறினார்.
02:04 PM (IST) May 10
கர்நாடகாவில் ஜேடிஎஸ் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி ராம்நகரில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். பிடாதி பேரூராட்சிக்கு உட்பட்ட கெட்டிகனஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு ஜூனியர் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார். "குடும்பத்துடன் வந்து வாக்களித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். ஜனநாயகத்தை வெல்ல அனைவரும் சரியாக வாக்களிக்க வேண்டும்" என்று ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்தார்.
01:54 PM (IST) May 10
பெங்களூருவில் காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. நண்பகல் 1 மணி நிலவரப்படி 30 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
01:51 PM (IST) May 10
கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா மைசூரு மாவட்டம் சித்தராமனஹூண்டியில் வாக்களித்தார். சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
01:47 PM (IST) May 10
பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் சுக்ரி கவுடா ஹொன்னாவரில் வாக்கு செலுத்தினார். இவர் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக ஹொன்னாவர் சென்றிருந்தபோது, அவரை ஆசிர்வதித்தார். அந்த வீடியோ அப்போது வைரலானது.
01:34 PM (IST) May 10
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 1 மணி வரை 44.16 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. முதல் ஆறு மணி நேரத்தில், கடலோர மாவட்டமான உடுப்பியில் அதிகபட்சமாக 47.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைநகர் பெங்களூரு மிகக் குறைந்த அளவே வாக்குகள் (29.41 சதவீதம்) பதிவு செய்யப்பட்டுள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
01:31 PM (IST) May 10
ஹாசன் மற்றும் பெல்காம் மாவட்டங்களில் வாக்களிக்க வந்த இரண்டு பேர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Karnataka Elections: பெல்காம், ஹாசனில் வாக்களிக்க வந்த 2 பேர் மாரடைப்பால் மரணம்
01:09 PM (IST) May 10
ஹவேரி மாவட்டம் ராணிபென்னுருவில் புதிதாகத் திருமணமான தம்பதிகள் மணக்கோலத்திலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.
01:01 PM (IST) May 10
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் நான்கு மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலோர மாவட்டமான உடுப்பியில் 30.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மிகக் குறைவான வாக்குப்பதிவு சாமராஜநகர் மாவட்டத்தில் (16.77 சதவீதம்) பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
12:06 PM (IST) May 10
கர்நாடகா சட்டசபை தேர்தலை முன்னிட்டு மைசூரில் இருக்கும் குவெம்பு நகரா பகுதியில் வாக்களிக்க வந்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத்.
11:55 AM (IST) May 10
கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் கனகபுரா தொகுதி வேட்பாளருமான டி.கே. சிவக்குமார் தன் சகோதரர் டி.கே. சுரேஷ் உடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.
11:41 AM (IST) May 10
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக 9 மணி வரை 8.2% சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், அடுத்த இரண்டு மணிநேரத்தில் வாக்குப்பதிவு சதவீதம் கூடியுள்ளது.
11:18 AM (IST) May 10
"தேர்தலுக்குப் பின் ஜேடிஎஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க மாட்டோம். பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கும்" என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
11:14 AM (IST) May 10
கர்நாடக தேர்தல்: பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிரும் ஜெகதீஷ் ஷெட்டர் குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு செய்தார். ஹூப்ளி குசுகல் சாலையில் உள்ள எஸ்பிஐ ஆபீசர்ஸ் சொசைட்டி பள்ளியில் அமைக்கப்பபட்டுள்ள வாக்குச் சாவடி எண் 122 இல் வாக்களித்துள்ளனர். "தொகுதியின் வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளேன், நீங்களும் தவறாமல் வாக்களியுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
10:50 AM (IST) May 10
முற்போக்கான மற்றும் '40 சதவீத கமிஷன் இல்லாத' மாநிலத்தை உருவாக்க கர்நாடக மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். அவர் இன்று இந்தியில் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட்டில், "அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
10:36 AM (IST) May 10
கொப்பல் மாவட்டம் யலபுர்கா சட்டமன்றத் தொகுதியின் பெனகல் கிராமத்தின் வாக்குச் சாவடி எண் 224 இல் ஏராளமான பெண் வாக்காளர்கள் வந்து வாக்கு செலுத்திச் செல்கின்றனர்.
10:31 AM (IST) May 10
11 தொகுதிகளை கொண்ட மைசூரு மாவட்டத்தில் வருணா வாக்கு சதவீதம் 11 சதவீதத்தை தாண்டியுள்ளது. வருணா தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
10:29 AM (IST) May 10
கர்நாடக தேர்தல்: பெங்களூரு ஜெயநகர் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
10:19 AM (IST) May 10
மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி ஹூப்ளியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார். வாக்களித்த பின்பு பேட்டி அளித்த அமைச்சர், "இந்த ஜனநாயகத் திருவிழாவை மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
10:17 AM (IST) May 10
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள காபு சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் (எண் 187) வாக்களிக்க வந்த மணமகள் மெலிதா சரஸ்
10:08 AM (IST) May 10
முதல்வர் பசவராஜ் பொம்மை, அவரது மகள் அதிதி, மகன் பாரத் பொம்மை ஆகியோர் ஹாவேரி மாவட்டம் ஷிகானில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தனர்.
10:05 AM (IST) May 10
தாலுகா சங்கனக்கல்லு கிராமத்தில் அரசு பள்ளியில் அமைந்துள்ள 2வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. வாக்குப்பதிவு எந்திரத்தை ஸ்டார்ட் செய்யும் போது, இயந்திரம் பழைய புள்ளிவிவரங்களைக் காட்டியது. வேட்பாளர் 45 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறுதியில், அதிகாரிகள், பழைய விவரங்களை அழித்துவிட்டு, இயந்திரத்தை மீண்டும் ஸ்டார்ட் செய்தனர். வாக்குப்பதிவு இயந்திரம் தயாராகும் வரை மக்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
09:54 AM (IST) May 10
யம்கன்மரடி தொகுதியில் உள்ள ஹோசா வந்தமுரி கிராமத்தைச் சேர்ந்த 89 வயதான சத்யப்பா லக்கப்பா கிலராகி, வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் கதறி அழுதார்.
09:48 AM (IST) May 10
உத்தர கர்நாடக மாநிலம் சிர்சியில் ஜனநாயகக் கடமையைச் செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து வந்த இளம்பெண் அஸ்வின் ராஜசேகா பட்.
09:42 AM (IST) May 10
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் இரண்டு மணிநேரம் வரையிலான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகியுள்ளது. அதன்படி காலை 9 மணி வரை 7.83 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
09:37 AM (IST) May 10
பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் காலை 9 மணி வரை 8.554 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
09:32 AM (IST) May 10
உடுப்பி இதுவரை 12 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவத் தகவல் கிடைத்துள்ளது.
09:30 AM (IST) May 10
முதல் முறையாக 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு வீட்டிலேயே வாக்களிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல முதிய வாக்களார்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்த ஓட்டு போட்டுச் செல்கின்றனர்.
09:25 AM (IST) May 10
முதல்வர் பசவராஜ் பொம்மை ஹூப்ளியில் உள்ள பார்ஷ்வ பத்மாலயா ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். அவருடன் அவரது மகன் பாரத் மற்றும் மகள் அதிதியும் இருந்தனர்.
09:16 AM (IST) May 10
பெங்களூரு வடக்கு, கிழக்கு மற்றும் சென்டரல் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை எனத் தகவல்.