இயேசு மட்டும் தான் உண்மையான கடவுள்.. வம்பில் சிக்கிய பாதிரியார் பொன்னையா - கடுப்பான பாஜக !

Published : Sep 10, 2022, 06:40 PM ISTUpdated : Sep 10, 2022, 07:57 PM IST
இயேசு மட்டும் தான் உண்மையான கடவுள்..  வம்பில் சிக்கிய பாதிரியார் பொன்னையா - கடுப்பான பாஜக !

சுருக்கம்

150 நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 9) தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய கத்தோலிக்க பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்தார்.

தமிழ்நாட்டு பாதிரியாருடன் ராகுல் காந்தி உரையாடிய வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது. அதில் ராகுல் காந்தி, "இயேசு கிறிஸ்து கடவுளின் வடிவமா? அது சரியா?" என்று கேட்பதைக் காணலாம். அதற்கு தமிழக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, "அவர் தான் உண்மையான கடவுள்" என்று பதிலளிக்கிறார். 

பொன்னையா, "கடவுள் தன்னை ஒரு மனிதனாக, உண்மையான மனிதனாக வெளிப்படுத்துகிறார்... சக்தியைப் போல் அல்ல... அதனால் நாம் ஒரு மனிதனைப் பார்க்கிறோம்" என்று கூறுகிறார்.

பொன்னையா கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக அமைச்சர் மற்றும் பலர் மீது வெறுப்பு உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.  இதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் மதுரை கல்லிக்குடியில் கைது செய்யப்பட்டார். ராகுல் காந்தி பாதிரியார் பொன்னையாவை புலியூர்குறிச்சியில் உள்ள முட்டிடிச்சான் பாறை தேவாலயத்தில் கடந்த வெள்ளி கிழமை சந்தித்தபோது, பாதிரியார் அவ்வாறு பேசியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா ராகுல் காந்தியை தாக்கி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ராகுல் காந்தியை சந்தித்த ஜார்ஜ் பொன்னையா, சக்தி (மற்றும் பிற இந்துக் கடவுள்கள்) போல் அல்லாமல் இயேசு மட்டுமே கடவுள் என்று கூறுகிறார்” என்று பதிவிட்டுள்ளார். மேலும்,  ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ, பாரத் டோடோ-வாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மேற்குவங்க பொறுப்பாளர் அமித் மால்வியாவும் கண்டித்துள்ளார். இவர் தனது டுவிட்டரில், ''பெரும்பான்மை சமூகத்தின் மீதும், அவர்களின் நம்பிக்கைகள் மீதும் உள்ள அவமதிப்புக்கு பெயர் பெற்ற ஒரு சர்ச்சைக்குரிய பாதிரியாரை சந்தித்தால், ராகுல் காந்தியின் “பாரத் ஜோடோ” யாத்திரை வெட்கத்திற்குரியது. எவ்வாறு பெரிய சமுதாயத்திற்கு சேவை செய்பவர்கள் ஒற்றுமையைக் கொண்டுவர முடியும்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளியாகி இருக்கும் வீடியோவில் பதிவானதற்கு எந்த சம்பந்தமும் இல்லை. பாரத் ஜோடோ யாத்திரை வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதை பொறுத்துக் கொள்ளாத பாஜக வழக்கம் போல் அவநம்பிக்கையுடன் நடந்து கொள்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!