முதல் மேப் வெளியானது.. ராமர் சேது பாலத்தின் ரகசியத்தை கண்டுபிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்..

By Ramya sFirst Published Jul 10, 2024, 10:25 AM IST
Highlights

இஸ்ரோ விஞ்ஞானிகள் நீரில் மூழ்கியதாக கருதப்படும் ராமர் சேது பாலத்தின் கட்டமைப்பை வெற்றிகரமாக வரைபடமாக்கி உள்ளனர்

இஸ்ரோ விஞ்ஞானிகள் நீரில் மூழ்கியதாக கருதப்படும் ராமர் சேது பாலத்தின் கட்டமைப்பை வெற்றிகரமாக வரைபடமாக்கி உள்ளனர். இந்த பாலம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பழமையான பாலமாக இந்திய மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ICESat-2 தரவை அக்டோபர் 2018 முதல் அக்டோபர் 2023 வரை பயன்படுத்தி, 10 மீட்டர் தெளிவுத்திறன் வரைபடத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கினர்,

இந்த வரைபடம் நீருக்கடியில் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரையிலான பாலத்தை காட்டுகிறது. இந்த பாலத்தில் 99.98 சதவீதம் ஆழமற்ற நீரில் மூழ்கியுள்ளது. சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இஸ்ரோ விஞ்ஞானிகள் அமெரிக்க செயற்கைக்கோளில் இருந்து மேம்பட்ட லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீரில் மூழ்கிய மலையின் முழு நீளத்தின் உயர்-தெளிவு வரைபடத்தை உருவாக்கினர்.

Latest Videos

கிரிபாபு தண்டபத்துலா தலைமையிலான ஆய்வுக் குழு, மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்திக்கு இடையே நீர் பாய்வதற்கு ஏதுவாக 11 குறுகலான கால்வாய்களைக் கண்டறிந்ததுடன், அவை கடல் அலைகளிலிருந்து கட்டமைப்பைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றியது என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு காலத்தில் நில இணைப்பாக இருந்த ராமர் சேது பாலத்தின் தோற்றத்தை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. இந்த புதிய கண்டுபிடிப்புகள் பிராந்தியத்தின் வரலாறு மற்றும் இந்த பண்டைய கட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன.

ராமர் சேது பாலத்தின் வரலாறு: இஸ்ரோ ஆய்வின் புதிய தகவல்கள்

கிழக்கிந்திய கம்பெனியின் வரைபட வல்லுநரால் நீரில் மூழ்கிய கட்டிடத்திற்கு ஆடம்ஸ் பாலம் என்று பெயரிடப்பட்டது. எனினும் இந்தியர்கள் இந்த பாலத்தை ராமர் சேது என்றே அழைக்கின்றனர். ராமாயணத்தில், ராமர் தனது மனைவி சீதையை மீட்க இலங்கை செல்வதற்காக தனது படைகளை கொண்டு ராமர் சேது பாலத்தை கட்டியதாக கூறப்படுகிறது. இந்த பாலத்தின் மூலம் தான் ராமர் இலங்கை சென்றார் என்றும் கூறப்படுகிறது.

கி.பி 9-ம் நூற்றாண்டில் பாரசீக கடற்படையினர் இந்த பாலத்தை சேது பந்தாய் அல்லது கடலின் மேல் உள்ள பாலம் என்று குறிப்பிட்டனர். 1480 ஆம் ஆண்டு வரை கடல் மட்டத்திற்கு மேல் இந்த பாலம் இருந்ததாக ராமேஸ்வரத்தின் கோவில் பதிவுகள் குறிப்பிடுகின்றன. அதன்பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த புயலால் இந்த பாலம் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, செயற்கைக்கோள் கண்காணிப்பு கடலுக்கு அடியில் கட்டுமானத்தை சுட்டிக்காட்டியது. ஆனால் இந்த கணிப்பு முதன்மையாக பாலத்தின் வெளிப்படையான பகுதிகளை மையமாகக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!