தரதரவென இழுத்து செல்லப்பட்ட நோயாளி.. தெலங்கானா அரசு மருத்துவமனையின் அவலம் - வைரல் வீடியோ!!

Published : Apr 16, 2023, 02:49 PM IST
தரதரவென இழுத்து செல்லப்பட்ட நோயாளி.. தெலங்கானா அரசு மருத்துவமனையின் அவலம் - வைரல் வீடியோ!!

சுருக்கம்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத்தில் மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவர் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ளது நிஜாமாபாத். இங்குள்ள அரசு ருத்துவமனை ஒன்றில் தான் இந்த் அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. நோயாளி ஒருவர் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிஜாமாபாத் அரசு பொது மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் அல்லது சக்கர நாற்காலி இல்லாததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் டி. ஹரீஷ் ராவ், மருத்துவக் கல்வி இயக்குனரிடம் விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பரிதாபகரமான மருத்துவமனை நிலை இருக்கிறது என்பதை இந்த வீடியோ காட்டுகிறது என்று ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. அண்ணாமலை பற்றி என்கிட்ட கேட்காதீங்க - கடுப்பான இபிஎஸ்

தெலுங்கானாவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் வார்டு அறைக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றனர். நோயாளியின் உறவினர்கள் கூறுகையில், இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மார்ச் 31 அன்று இது நடந்தது என்று கூறப்படுகிறது. மயக்கமடைந்த நோயாளி, இரவு முழுவதும் ஓபி பிரிவுக்கு செல்லும் நடைபாதையில் தரையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். 

அவரை தரையில் படுக்க வைத்து, மறுநாள் காலை அவரது கால்களால் அறைக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். நோயாளி மீண்டும் லிப்ட் வரை இழுத்துச் செல்லப்பட்டார். நோயாளியை இரண்டாவது மாடிக்கு மாற்ற வேண்டும் என்று உறவினர்களுக்குத் தெரிவித்த பிறகு, ஸ்ட்ரெச்சரை ஏற்பாடு செய்வதில் ஊழியர்கள் நேரத்தை வீணடிக்கவில்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நோயாளியின் பெற்றோர், ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரின் வருகைக்காக காத்திருக்கவில்லை. அவர்கள் லிப்டிற்கு இழுத்துச் சென்றனர்.  இந்த காட்சியை யாரோ கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகில் ஸ்ட்ரெச்சர்கள் அல்லது சக்கர நாற்காலிகளுக்கு எந்தப் பற்றாக்குறையும் இல்லை என்றும் அரசு மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..எனக்கு வேற வழி தெரியல.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - திமுக ஊழல் வீடியோ வெளியான பின்னணி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!