உலகிற்கே எடுத்துக் காட்டாக இருக்கும் மோடி அரசின் ஆதார் கார்டு; இறுகும் பிடிகள்!!

Published : Aug 02, 2023, 03:49 PM ISTUpdated : Aug 02, 2023, 04:13 PM IST
உலகிற்கே எடுத்துக் காட்டாக இருக்கும் மோடி அரசின் ஆதார் கார்டு; இறுகும் பிடிகள்!!

சுருக்கம்

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அரசு கொண்டு வந்து இருக்கும் ஆதார் திட்டம் உலகிற்கே இன்று எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஆதார் வாயிலாக பிறப்பு, இறப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்வதற்கு ஆதார் என்ற தனித்துவ அடையாள எண்ணை கட்டாயமாக்கும் திருத்த மசோதா நரேந்திர மோடி அரசால் 2019ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தத்தின் பின்னணியில் இருக்கும் முக்கிய விஷயம் இந்திய பிரஜ்ஜைகளுக்கான பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நெறிப்படுத்துதல் ஆகும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செயல்முறையை ஒழுங்குபடுத்துவது உலகின் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இந்தியா இருக்கும். உலகின் பல பகுதிகள் இன்னும் பழைய முறையிலான பதிவேடுகளை பராமரிக்கின்றன. இதனால் சில நாடுகள் வளர்ந்து வரும் மக்கள்தொகை, முன்னுரிமைகள் மற்றும் பொருளாதாரத் தேவைகளை தக்க வைத்துக் கொள்ள தவறிவிட்டன. 

பினாமி சொத்துக்கு ஆப்பு:
சமூகம் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்ப பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெறுவதற்கும், நவீனமயமாக்கவும் இந்த திருத்தம் உதவுகிறது. இத்துடன் மாநிலம் மற்றும் தேசியளவில் பிறப்பு, இறப்புகளை இணைப்பதற்கு இந்த திருத்தம் உதவுகிறது. இந்த பதிவு பல்வேறு தரவுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. மேலும், ஊழலையும் ஒழிக்க உதவும். பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கும்போது சிக்கல் ஏற்படும். சொத்து பதிவுக்கு ஆதார் முக்கியம் என்று வரும்போது, சிக்கல் ஏற்படும்.

புதிய சட்டத்தின் கீழ், பிறப்புச் சான்றிதழ் ஒரு நபரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்திற்கான அதிகாரப்பூர்வ ஆவணமாக இருக்கும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 இன் தொடக்க தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த நபர்களுக்கு இந்தத் திருத்தங்கள் பொருந்தும், அதன்படி அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஆதார் எண்ணுடன் கூடிய பிறப்புச் சான்றிதழில் பள்ளி சேர்க்கை, ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருமணங்களை பதிவு செய்தல், அரசுப் பணிகளுக்கு விண்ணப்பித்தல், பாஸ்போர்ட் பெறுதல், ஆதார் எண் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருக்கும்.

வருமான வரி ஏய்ப்பு: 
அனைத்து கட்டங்களிலும் ஆதார் எண் தேவை என்கிறபோது, வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களும் எதிர்காலத்தில் சிக்க நேரிடும். தற்போது வங்கிகள், வருமான வரி, வாக்காளர் அடையாள அட்டை, நலத்திட்டங்கள் என அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏமாற்றப்படுவது களையப்படுகிறது.

ஆதார் - பான் கார்டு இணைக்கவில்லையா.? இனி இந்த 15 விஷயங்களை செய்ய முடியாது - முழு விபரம்

உலகளவில், பிறப்பு மற்றும் இறப்பு தரவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் இது முக்கிய பதிவுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், சட்ட நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகவும் அமைகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் பல்வேறு நோக்கங்களுக்கு உடனடியாக புள்ளி விவரங்கள் வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளலாம். 

அமெரிக்கா:

தேசிய சுகாதாரப் புள்ளியியல் மையம் (NCHS) மாகாணங்களில் தேசிய சுகாதாரப் புள்ளி விவரங்களைத் தயாரித்து வருகிறது. இது தேசிய முக்கிய புள்ளியியல் அமைப்பை (NVSS) இயக்குகிறது. இது ஆண்டுதோறும் 6 மில்லியனுக்கும் அதிகமான முக்கிய நிகழ்வு பதிவுகளிலிருந்து தரவைச் சேகரிக்கிறது. இந்த பதிவுகளில் பிறப்புகள், இறப்புகள், திருமணங்கள், விவாகரத்துகள், கர்ப்பப்பை மரணங்கள் மற்றும் கர்ப்பத்தை கலைத்தல் ஆகியவை அடங்கும். என்விஎஸ்எஸ் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. 

முக்கிய புள்ளிவிபரங்களில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. தனிப்பட்ட மனிதரின் உரிமையை பாதுகாத்தல், சொத்து உரிமையை பாதுகாத்தல் என்ற நோக்கத்தின் அடிப்படையில்  பிறப்பு, திருமணம், இறப்புகளின் பதிவுகளை காலனித்துவ காலத்திலிருந்தே அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இந்த தரவுகள் பின்னர் பொது சுகாதாரம் மற்றும் சுகாதார சீர்திருத்தங்களுக்கு உதவின. கூட்டாட்சி அரசாங்கம் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசிய முக்கிய புள்ளி விவரங்களை சேகரிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் பிறப்பு மற்றும் இறப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தியது. அரசின் பல்வேறு திட்டங்களுக்கு என்விஎஸ்எஸ் பல்வேறு தரவுகளை வழங்கி வருகிறது. 

பாகிஸ்தான்:
பாகிஸ்தானில், 'பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சட்டம், 1886' பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யும் முதன்மைச் சட்டமாக செயல்படுகிறது. முக்கிய தரவுகளை பாதுகாப்பதற்கு இது உதவுகிறது. உள்ளூர் சிவில் அதிகாரிகள் பதிவு செயல்முறையை மேற்பார்வை செய்கிறார்கள். அந்தந்த அதிகார வரம்புகளுக்குள் பிறப்பு மற்றும் இறப்புகளின் துல்லியமான ஆவணங்களை உறுதி செய்கிறார்கள். குழந்தை பிறந்த உடனேயே பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் பிறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இறப்புகளை பதிவு செய்ய வேண்டும். குழந்தையின் பெற்றோர் (பிறந்த நிலையில்) அல்லது இறந்த நபரின் பெயர்,   தேதி மற்றும் இடம் மற்றும் பிற தகவல்களை பதிவு செய்ய வேண்டும். 

ஜப்பான்:

கோசெகி என்பது திருமணமான தம்பதிகள் மற்றும் அவர்களது திருமணமாகாத குழந்தைகள் உட்பட அனைத்து குடும்பங்களுக்கும் சட்டப்படி தேவைப்படும் ஜப்பானிய குடும்பப் பதிவேடு ஆகும். பிறப்பு,  தத்தெடுப்பு, இறப்பு,  திருமணம் மற்றும் விவாகரத்துகள் போன்ற முக்கியமான பதிவுகளை குடும்பங்கள் தங்கள் உள்ளூர் நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவரங்கள் மற்ற அனைவருக்கும் தெரியுமாறு பதிவேற்றம் செய்யப்படுகிறது. இவையெல்லாம் கோசெகியில் பதிவு செய்தால் மட்டுமே சட்டப்பூர்வமாகிறது. பிறப்பு மற்றும் இறப்புகள் நிகழும்போது குடும்ப உறுப்பினர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனிநபர்கள் இந்த பதிவுகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். 

பான் கார்டில் பேரு தப்பா இருக்கா? ஆன்லைனில் ஆதார் eKYC மூலம் ஈசியாக பெயரை மாற்றலாம்!

சீனா:

1958 இல் சீனாவில் ஹுகோ ( Hukou) சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 1985 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிப்பட்ட அடையாள அட்டைகளுடன் கூடிய நவீன மக்கள் தொகை பதிவு முறையாக செயல்படுகிறது. இது மூன்று முக்கிய செயல்பாடுகளை நிறைவேற்றுகிறது: உள் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல், சமூகப் பாதுகாப்பை நிர்வகித்தல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல். புதிய நகரமயமாக்கல் திட்டம் இருந்தாலும், சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமான நகரவாசிகள் இன்னும் நகர்ப்புற ஹுகோ அந்தஸ்தைக் கொண்டிருக்கவில்லை. இந்தக் கட்டுப்பாடு பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கலாம் மற்றும் மக்கள்தொகை சவால்களை அதிகரிக்கலாம். வயதான மக்கள் தொகை மற்றும் எதிர்கால தலைவர்கள் பெரிய நகரங்களில் இருந்து தடை செய்யப்படலாம்.

ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவில், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள், பெயர் மாற்றங்கள், உறவுகளின் பதிவு, தத்தெடுப்புகள், வாடகைத் தாய், பாலின மாற்றங்கள் ஆகிய பதிவுகளை தனிப்பட்ட மாநிலங்களால்  நிர்வகிக்கப்படுகின்றன. இந்த பதிவுகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு மாநிலமும், பிரதேசமும் பிறப்பு, இறப்பு, திருமண பதிவு என்னும் அலுவலகத்தை பராமரித்து வருகிறது. சிவில் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பதிவு நடைமுறைகள் மற்றும் தகவல்கள் மாறுபடலாம். சமீபத்தில்  சான்றிதழ்களைப் பெறுவதற்கான செயல்முறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. தனிநபர்கள் ஆன்லைனில் பெறலாம். இருப்பினும், மின்னஞ்சல் முறையில் சான்றிதழ்களைப் பெறுவதில் சிறிது தாமதம் ஏற்பதுவதாக கூறப்படுகிறது.

பிரிட்டன்:
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் -கான பொதுப் பதிவு அலுவலகம் அதன் அதிகார எல்லைக்குள் நிறுவப்பட்டுள்ளது. அந்தந்த அலுவலகங்களில் பிறப்பு, தத்தெடுப்பு, திருமணங்கள், சிவில் கூட்டாண்மை, இறப்பு போன்ற முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும். இது 1836 இல் நிறுவப்பட்டது. சிவில் பதிவுகள் 1837 இல் இருந்து தொடங்கின. பொதுப் பதிவு அலுவலகம் சான்றிதழ்களின் நகல்களை வழங்குகிறது மற்றும் உள்ளூர் பதிவு அலுவலகங்கள் மூலம் செயல்படுகிறது. இது உருவாக்கப்படுவதற்கு முன்பு, சிவில் பதிவுக்கான தேசிய அமைப்பு இல்லை, சர்ச் ஆஃப் இங்கிலாந்தால் பராமரிக்கப்படும் பாரிஷ் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டன. சொத்து உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மருத்துவத் தரவுகளை பெறுவதற்கும் மேம்படுத்தப்பட்ட பதிவு தேவைப்பட்ட நிலையில் பொது பதிவு அலுவலகம் கொண்டு வரப்பட்டது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

திருவனந்தபுரத்துக்கு நன்றி.. கேரள அரசியலில் பெரும் திருப்புமுனை.. பிரதமர் மோடி பெருமிதம்!
கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கெத்து..! மும்தாஜ் தாஹா, ஸ்ரீலேகா.. சிங்கப் பெண்களை வைத்து மாஸ் வெற்றி!