உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள்.. மத்திய அரசின் தீவிர முயற்சி.. மாணவர்கள் நன்றி !!

Published : Mar 08, 2022, 02:03 PM IST
உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள்.. மத்திய அரசின் தீவிர முயற்சி.. மாணவர்கள் நன்றி !!

சுருக்கம்

உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். 

உக்ரைன் - ரஷியா போர் :

இதுவரை 17 லட்சம் பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மூட்டை, முடிச்சுகளுடன் ஊரை காலி செய்துவிட்டு சென்றவண்ணம் உள்ளனர். இதற்கிடையே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. முயற்சி மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

ஆனால் இதுவரை எந்த சமரச முயற்சியும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து ரஷிய தாக்குதலில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்கள் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு ஜ.நா. கோரிக்கை விடுத்தது. இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு ரஷியா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது. 

போர் நிறுத்தம் :

இந்த அறிவிப்பு வெளியானதும் உக்ரைனில் இருந்து மக்கள் கைக்குழந்தைகளுடன் வெளியேற முயன்றனர். ஆனால் ரஷியா போர் நிறுத்தத்தை முறையாக கடைபிடிக்கவில்லை என்று உக்ரைன் குற்றம்சாட்டியது. போர் நிறுத்தம் என்று கூறிவிட்டு ரஷியா தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டதாகவும் கூறியது.

ஏசியாநெட் பிரத்யேக பேட்டி :

உக்ரைனில் இருந்து வரும் அகதிகள், உக்ரேனிய-போலந்து எல்லையை அடைந்த முதல் இந்திய தொலைக்காட்சி ‘ஏசியாநெட்’ ஆகும். செய்தியாளர் பிரசாந்த் ரகுவன்ஷாவிடம் பேசிய தன்னார்வலர்கள், ‘ நாற்பது கிலோமீட்டர்கள் நடந்து, எல்லையில் நான்கு மணி நேரம் காத்திருந்த பிறகு, மாணவர்கள் எல்லையைத் தாண்ட அனுமதி கிடைக்கிறது. போலந்து எல்லையில் இருந்து அனுமதி பெற மாணவர்கள் இன்னும் காத்திருக்க வேண்டியிருந்தது. 

அதனால் மெடிகா பார்டர் வழியாக மாணவர்களுக்கு மிகுந்த சிரமம் வந்தது. எந்தெந்த எல்லைகள் வழியாக எல்லையை கடக்க முடியும் என்பது மாணவர்களுக்கு தெளிவாக தெரியவில்லை. மாணவர்கள் வரத்தொடங்கிய முதல் சில நாட்கள் மிகவும் சிரமமாக இருந்தது. எந்த திசையில் செல்வது, யாருடைய திசையை பின்பற்றுவது என்று மாணவர்கள் கவலைப்பட்டனர். முதல் சில நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. 

வெகு தொலைவில் உள்ள சோதனைச் சாவடிகளுக்கு பலர் வந்தனர். 170 கி.மீ  தூரம் சென்றதும், குளிரில் பஸ்சுக்காக காத்திருப்பது சிரமம். இந்திய தூதரகத்திலிருந்து ஆட்கள் வந்ததால், கொஞ்சம் சிறப்பாக விஷயங்களை ஒருங்கிணைக்க முடிந்தது என்று தன்னார்வலர்கள் தெரிவித்தனர். சுமியில் இருந்து திரும்பிய மாணவர்கள் உக்ரைன்-போலந்து எல்லையில் இருந்து ஏசியாநெட் நியூஸிடம் பேசினர். 

இந்திய தூதரகத்தின் உதவி :

பஞ்சாப்பைச் சேர்ந்த மாணவர் கூறுகையில், கார்கிவில் இருந்த நாட்கள் தாங்க முடியாதவை. பீச்ஸ் நகருக்கு வந்த போது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்திய தூதரகத்தின் பெரும் உதவி கிடைத்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் சுமியில் உள்ள மாணவர்களை நகரத்தை விட்டு வெளியேற தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளது.

மேற்கு எல்லையை அடைய உக்ரைனின் பொல்டாவாவை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மீட்பு பணியை ஒருங்கிணைக்க தூதரக அதிகாரிகள் பொல்டாவாவுக்கு வந்தனர். நேரம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தூதரகம் தெரிவித்துள்ளது.  சுமியில் 700 மாணவர்கள் சிக்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

இதனிடையே, கியேவில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவர் ஹர்ஜோத் சிங் இன்று நாடு திரும்புகிறார். மத்திய அமைச்சர் வி.கே.சிங்குடன் ஹர்ஜோத் சிங் திரும்புவார். பின்னர் அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்படுவார். இதனிடையே,  உக்ரைன் எல்லை வழியாக இந்தியாவை வெளியேற்றும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DA Hike: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 2% அகவிலைப்படி உயர்வு - அதிரடி அறிவிப்பு..!
New rules for Indian smartphones: ஸ்மார்ட்போன்களில் ஆதார் கட்டாயமா? – அரசு எடுத்த திடீர் ‘யு-டர்ன்’!