உலகின் நான்காவது பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கொண்ட நாடானது இந்தியா - ஆய்வு முடிவுகள் இதோ!

Ansgar R |  
Published : Sep 25, 2023, 05:00 PM IST
உலகின் நான்காவது பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கொண்ட நாடானது இந்தியா - ஆய்வு முடிவுகள் இதோ!

சுருக்கம்

ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான Startup Genomeன் வெளியிட்ட ஒரு புதிய அறிக்கையின்படி, VC முதலீட்டில் இந்தியா $50 மில்லியனுக்கும் அதிகமாகப் பெற்றுள்ளது என்று கூறுகிறது. ஆகையால் உலகில் அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

உலகில் அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கொண்ட நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளது. கொள்கை ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன ஸ்டார்ட்அப் ஜீனோம் அறிக்கை, VC முதலீட்டில் (வென்ச்சர் கேபிடல் இன்வெஸ்ட்மென்ட்) இந்தியா $50 மில்லியனுக்கும் அதிகமாகப் பெற்றுள்ளது என்று கூறுகிறது. இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, சீனா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 429 ஸ்கேல்அப் நிறுவனங்கள் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அதாவது இந்த 429 நிறுவனங்களின் மொத்த மூலதன முதலீடு சுமார் 127 பில்லியன் டாலர்கள், மற்றும் அதன் ஒட்டுமொத்த தொழில்நுட்ப மதிப்பு முதலீடு சுமார் 446 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த இரண்டு இரண்டு முதலீடுகளிலும் இந்தியா இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது என்று அந்த நிறுவனம் தெறிவித்துள்ளது. 

தபால் நிலைய சேமிப்பு திட்டம்.. குறைந்தபட்ச மாத முதலீட்டில் 3 மடங்கு லாபம் தரும் Super Scheme - முழு விவரம்!

இந்திய ஸ்டார்ட்அப்கள் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர்களின் வாடிக்கையாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆசியாவிற்கு வெளியே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் சந்தையில் கவனம் செலுத்தும் Startup நிறுவனங்கள்

அமெரிக்காவைத் தவிர, பல பெரிய நாடுகள் தங்கள் உள்ளூர் சந்தையில் அதிக கவனம் செலுத்துவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாகும். உள்நாட்டு சந்தையின் அளவு பெரியதாக இருப்பதால், சில சமயங்களில் உலக சந்தையை விட அதிக லாபத்தை பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலான நாடுகள் உலகளாவிய சந்தைக்கு பதிலாக தங்கள் உள்ளூர் ஸ்டார்ட்அப்களில் கவனம் செலுத்துகின்றன.

B2C தொடக்கம் மற்றும் உலகளாவிய சந்தை

பிசினஸ் டு கஸ்டமர் (B2C) ஸ்டார்ட்அப்கள் இந்தியாவில் மிகவும் வெற்றிகரமாக உள்ளன. கோடிக்கணக்கான டாலர்கள் நிதியுதவி ஏதும் இல்லாமல்  உருவாகியுள்ளது. 'உள்ளூர் இணைப்புக் குறியீடு' என்ற கருத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில், அதிக உள்ளூர் இணைப்புக் குறியீட்டைக் கொண்ட ஆரம்ப கட்ட ஸ்டார்ட்-அப்களின் வருவாய், குறைந்த குறியீட்டைக் கொண்ட ஸ்டார்ட்அப்களை விட இரண்டு மடங்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்று அந்நிறுவனம் கூறுகிறது.

இது தவிர, உலகளாவிய தொடர்புகள் குறித்தும் அந்த அறிக்கை கவனம் செலுத்துகிறது. வரையறுக்கப்பட்ட உலகளாவிய இணைப்புகளைக் கொண்ட ஸ்டார்ட்அப்களை விட வலுவான உலகளாவிய நெட்வொர்க்கை உருவாக்கும் ஸ்டார்ட்அப்கள் 3.2 மடங்கு அதிக ஆற்றலைக் கொண்டுள்ளன. சிலிக்கான் பள்ளத்தாக்கு, நியூயார்க் மற்றும் லண்டன் போன்ற சிறந்த உலகளாவிய மையங்களுடன் அதிகம் இணைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள், உலகம் முழுவதும் அதிக விகிதத்தில் வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப்களைக் கொண்டுள்ளன.

எஃப்டிக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் எவை?

PREV
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!