கொலைவெறியில் தாக்கும் கொரோனா.. ஒரே நாளில் 50 ஆயிரத்தை கடந்த பாதிப்பு.. அலறும் இந்தியா.. மிரளும் பொதுமக்கள்..!

By vinoth kumarFirst Published Jul 30, 2020, 10:55 AM IST
Highlights

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 52,123 பேருக்கு புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,83,792ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 52,123 பேருக்கு புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,83,792ஆக அதிகரித்துள்ளது. 

சீனாவின் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில்,  இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில் 52,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  15,83,792ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 775 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 34,968ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 10,20,582 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 5,28,242ஆக உள்ளது. 

இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 4,00,651 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,39,755ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,463ஆக உயர்ந்துள்ளது. 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 2,34,144 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3,741 பேர் உயிரிழந்துள்ளனர். 3வது இடத்தில் உள்ள டெல்லியில் 1,33,310 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,907 பேர் உயிரிழந்துள்ளனர். 4வது இடத்தில் ஆந்திராவும், 5வது இடத்தில் கர்நாடகவும் உள்ளது.

click me!