இந்தியா எங்கள் "நெருங்கிய கூட்டாளி" - டெல்லியில் இருந்து "கடன் நிவாரணம்" கோரிய மாலத்தீவு அதிபர் முகமது முய்சு!

Ansgar R |  
Published : Mar 22, 2024, 09:48 PM IST
இந்தியா எங்கள் "நெருங்கிய கூட்டாளி" - டெல்லியில் இருந்து "கடன் நிவாரணம்" கோரிய மாலத்தீவு அதிபர் முகமது முய்சு!

சுருக்கம்

Maldives President : மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, இந்தியாவுக்கு எதிரான தனது கருத்தில் இருந்து தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக தெரிகின்றது. மேலும் புது டெல்லியில் இருந்து "கடன் நிவாரணம்" அவர் கோரியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா தனது நாட்டின் "நெருக்கமான கூட்டாளியாக" தொடர்ந்து இருக்கும் என்று கூறியுள்ளார் அவர். கடந்த ஆண்டு இறுதியில் மாலத்தீவுகள் சுமார் 400.9 மில்லியன் டாலர்களை இந்தியாவிடம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பரில், ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து, சீனா சார்பு மாலத்தீவு தலைவர் இந்தியாவுக்கு கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வந்தார். 

மேலும் மூன்று விமான தளங்களை இயக்கும் இந்திய இராணுவ வீரர்களை மே 10க்குள் தனது நாட்டிலிருந்து திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரினார். ஆனால் நேற்று வியாழன் அன்று, ஜனாதிபதி முய்ஸு, பதவியேற்ற பிறகு உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த முதல் நேர்காணலில், மாலத்தீவுகளுக்கு உதவி வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், "மிகப்பெரிய எண்ணிக்கையிலான" திட்டங்களை செயல்படுத்தியதாகவும் கூறினார்.

2 நாள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி.. இந்திய பிரதமரை கோலாகலமாக வரவேற்ற பூடான் அரசு..

மாலத்தீவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா தொடரும் என்றும், இது குறித்து எந்த கேள்வியும் இல்லை என்று அவர் கூறினார். இந்திய ராணுவ வீரர்களின் முதல் தொகுதி திட்டமிட்டபடி இந்த மாதம் அந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு இந்தியாவைப் புகழ்ந்து கருத்துகள் வந்துள்ளன. மே 10 ஆம் தேதிக்குள், மூன்று இந்திய விமான தளங்களை நிர்வகிக்கும் அனைத்து 88 இராணுவ வீரர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜனாதிபதி முய்ஸு கோரியது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவு மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டோர்னியர் விமானம் மூலம் மனிதாபிமான மற்றும் மருத்துவ மீட்பு சேவைகளை இந்தியா வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாலத்தீவுகள் இந்தியாவிடமிருந்து கணிசமான கடன்களைப் பெற்றுள்ளன, அவை மாலத்தீவுப் பொருளாதாரத்தால் தாங்கக்கூடியதை விட அதிகமாக உள்ளன. "இதன் காரணமாக, மாலத்தீவின் சிறந்த பொருளாதார திறன்களுக்கு கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான விருப்பங்களை ஆராய அவர் தற்போது இந்திய அரசாங்கத்துடன் விவாதித்து வருகிறார்" என்று தகவல் வெளியாகியுள்ளது.

"இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் இந்தியா கடன் நிவாரண நடவடிக்கைகளை எளிதாக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, அவர்களின் பங்களிப்புகளுக்கு இந்திய அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாகக் கூறினார். இந்தியா சார்பு தலைவர் இப்ராஹிம் முகமது சோலியின் நிர்வாகத்தின் கீழ் இருந்த முந்தைய ஆட்சியின் போது, ​​இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியில் (எக்ஸிம் வங்கி) எடுக்கப்பட்ட மொத்தக் கடன் $1.4 மில்லியன் ஆகும்.

பூடானின் உயரிய குடிமகன் விருது - இந்த பெருமையை பெரும் முதல் வெளிநாட்டு அரசாங்கத் தலைவராகிறார் மோடி!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!