மீண்டும் சபரிமலைக்கு வந்தே தீருவேன்... கவிதா ஆவேசம்!

By vinoth kumarFirst Published Oct 19, 2018, 11:42 AM IST
Highlights

இவர்கள் பக்தர்களே அல்ல. தேவையில்லாமல் பிரச்சினையைக் கிளப்புவதற்கென்றே கோயிலுக்குள் நுழைய நினைக்கிறார்கள்’ என்ற பக்தர்களின் குற்றச்சாட்டுக்களால் திருப்பி அனுப்பப்பட்ட இரு பெண் பத்திரிகையாளர்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான கவிதா ‘நான் மீண்டும் கோயிலுக்கு வந்தே தீருவேன்’ என்று சூளுரைத்திருக்கிறார்.

இவர்கள் பக்தர்களே அல்ல. தேவையில்லாமல் பிரச்சினையைக் கிளப்புவதற்கென்றே கோயிலுக்குள் நுழைய நினைக்கிறார்கள்’ என்ற பக்தர்களின் குற்றச்சாட்டுக்களால் திருப்பி அனுப்பப்பட்ட இரு பெண் பத்திரிகையாளர்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான கவிதா ‘நான் மீண்டும் கோயிலுக்கு வந்தே தீருவேன்’ என்று சூளுரைத்திருக்கிறார். 

தெலுங்கானா பெண் பத்திரிகையாளர் கவிதா சற்றுமுன்னர் மூத்த போலிஸ் அதிகாரிகளால் சாமர்த்தியமாக பேசி சன்னிதான பகுதியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

 

அங்கிருந்து வெளியேறிய அவர், ‘பதட்டமான சூழ்நிலை நிலவுவதை மனதில் கொண்டு இப்போதைக்கு என் எண்ணத்தை மாற்றிக்கொண்டு வெளியேறி வந்திருக்கிறேன். ஆனால் சபரிமலைக்கு மீண்டும் வந்தே தீருவேன். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை’ என்று பிடிவாதம் பிடிக்கிறார்.

click me!