தறிகெட்டு தாறுமாறாக ஓடிய குதிரை – கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற வினோதம்...

Asianet News Tamil  
Published : Jun 06, 2017, 01:42 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
தறிகெட்டு தாறுமாறாக ஓடிய குதிரை – கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற வினோதம்...

சுருக்கம்

Horse crashes through car windshield in Rajasthan

பலவித கார் விபத்துகள் குறித்து கேள்விபட்டிருப்போம், பத்திரிகைகளில் படித்திருப்போம், நேரில் கண்டிருப்போம். ஆனால் ஓடும் காரில் குதிரை முன்புற கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த வினோதமான விபத்து ஜெய்பூரில் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள ஹசன்பூர் என்ற இடத்தில் குதிரை ஒன்று ஓடும் காரில் வந்து மோதியதில் வண்டி ஓட்டுனருக்கும் குதிரைக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கட்டுக்கடங்காமல் ஓடிய குதிரை முதலில் ஒரு இரு சக்கர வாகன ஓட்டுனர் மீது மோதியது பிறகு பதட்டத்தில் விலகி ஓடிய குதிரை அந்த வழியாக வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் குதிரை காரின் முன்புற கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மாட்டிக்கொண்டது. இந்நிலையில் வனத்துறையினர் அப்பகுதி மக்களின் உதவியுடன்  மிகவும் சிரமப்பட்டு கார் ஓட்டுனரையும், குதிரையும் உயிருடன் மீட்டனர்.

கடுமையான வெய்யில் தாங்க முடியாமல் குதிரை தறிகெட்டு ஓடியதாகவும், மேலும் அந்த குதிரைக்கு கண் பார்வை கோளாறு இருப்பதாகவும் குதிரையை பரிசோதித்த டாக்டர் அரவிந்த் மாதுர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!