முதன்முறையாக மொபைல் நெட்வொர்க்கை பெற்ற ஹிமாச்சல பிரதேச கிராமம்.. மக்களிடம் பேசிய பிரதமர் மோடி..

Published : Apr 19, 2024, 04:15 PM IST
முதன்முறையாக மொபைல் நெட்வொர்க்கை பெற்ற ஹிமாச்சல பிரதேச கிராமம்.. மக்களிடம் பேசிய பிரதமர் மோடி..

சுருக்கம்

இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள கியு கிராமத்தில் இன்று முதல் முறையாக மொபைல் நெட்வொர்க் சேவை வழங்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள கியு கிராமத்தில் இன்று முதல் முறையாக மொபைல் நெட்வொர்க் சேவை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த கிராம மக்களின் தகவல்தொடர்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது. இவ்வளவு காலம் கியு கிராம மக்கள் மொபைல் இணைப்பு இல்லாமல் வாழ்ந்தனர். ஆனால் தற்போது முதன்முறையாக இந்த மொபைல் நெட்வொர்க் கிடைத்துள்ளது.

இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று உள்ளூர் மக்களுடன் தொலைபேசியில் பேசினார். 13 நிமிடங்களுக்கு மேல் நீடித்த தொலைபேசி உரையாடலின் போது, மோடி தீபாவளியின் போது எல்லைப் பகுதிக்கு தனது வருகை குறித்து விவாதித்தார், மேலும் கிராமத்தை மொபைல் நெட்வொர்க்குடன் இணைப்பது 'டிஜிட்டல் இந்தியா' பிரச்சாரத்தை விரைவுபடுத்தும் என்றும் தெரிவித்தார்..

Lok Sabha Election: இன்றைய வாக்குப்பதிவு சாதனையை எட்டனும்.. ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது-மோடி

நாட்டின் அனைத்து பகுதிகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் இணைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். தான் பதவியேற்றபோது, 18,000 கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தன என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அப்போது பிரதமரிடம் பேசிய கிராமவாசி ஒருவர், தங்கள் பகுதி மொபைல் நெட்வொர்க்குடன் இணைக்கப்படும் என்று சொன்னபோது ஒரு கணம் நம்ப முடியவில்லை என்றும், இறுதியாக அது நடந்தபோது அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றும் தெரிவித்தார். 

மேலும் தாங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு சுமார் 8 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியிருந்தது என்று கிராமவாசி ஒருவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர்,  மூலம் எல்லைப் பகுதிகளில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான தனது அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து பேசினார். மேலும். முந்தைய நிர்வாகங்கள் இந்தப் பகுதிகளை புறக்கணித்து, தங்களைத் தற்காத்துக் கொள்ள விட்டுவிட்டன என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Indian Navy : பெருமைமிகு இந்திய கடற்படை - அடுத்த தலைவராக நியமனம் செய்யப்பட்டார் அட்மிரல் தினேஷ் திரிபாதி!

மேலும் “ தனது மூன்றாவது பதவிக்காலத்தில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறினார். இந்த மாற்றம் தொலைதூரப் பகுதிகளுக்கும், சமூகத்தின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கப் பிரிவினருக்கும் பெரிதும் பயனளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தால் இப்பகுதி நிறைய பயனடையும், என்றும் பிரதமர் கூறினார்..

இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல் மற்றும் ஸ்பிடி மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் முதல் கிராமமான கௌரிக் மற்றும் கியூ ஆகிய இடங்களுக்கு இப்போது தொலைத்தொடர்பு இணைப்பு வந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 14,931 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த தொலைதூர கிராமங்கள் இப்போது தொலைத்தொடர்பு சேவைகளை அணுக முடியும்.

இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் அமைந்துள்ள கவுரிக், பராங் அல்லது பரே சூ நதியின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது திபெத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. கியு என்பது ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் தபோ கிராமத்தில் உள்ள தபோ மடாலயத்திலிருந்து தோராயமாக 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இந்த கிராமம் இந்தியா-சீனா எல்லையில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Citizenship: இந்திய குடியுரிமைக்கு பாஸ்போர்ட் போதாது! உண்மையான ஆதாரம் எது தெரியுமா?"
IRCTC: ₹250 இல்லை... இனி ₹500! டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தால் காத்திருக்கும் அதிரடி அபராதம்