விமான படை ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது! 5 பேர் பலி

Asianet News Tamil  
Published : Oct 06, 2017, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
விமான படை ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது! 5 பேர் பலி

சுருக்கம்

Helicopter exploded 5 killed

அருணாச்சலபிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வெடித்து சிதறி  விபத்துக்குள்ளானது.

அதில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்திய விமான படைக்குச் சொந்தமான Mi-17 V5 ஹெலிகாப்டர், இன்று அதிகாலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அருணாச்சல பிரதேசம், டாவாங் பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டது.

அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

Mi-17 V5 ரக ஹெலிகாப்டர், இந்திய விமானப் படையின் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, இந்திய விமான படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கைகாட்டுபவரே முதல்வர்..! ராகுல் காந்தியின் மாஸ்டர் ப்ளான்..! கதிகலங்கும் கதர் சட்டைகள்..!