தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை !! எடப்பாடி அதிரடி !!

By Selvanayagam PFirst Published Feb 16, 2019, 1:01 PM IST
Highlights

புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் வீர மரணம் அடைந்த அரியலூர்  சிவசந்திரன் மற்றும் தூத்துக்குடி சுப்ரமணியன்  ஆகியோரின் குடும்பத்தில்  ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீர்கள் அணிவகுத்துக் சென்று கொண்டிருந்தபோது அவர்களது வாகனத்திம் மீது  தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவசந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த  சுப்ரமணியன் என்ற இருவரும் உயிரிழந்தனர்.

இதனை உறுதிப்படுத்திய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

அரியலூர் சிவசந்திரனுக்கு தாய் – தந்தை  உள்ளனர் அவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர், மேலும் சிவசந்திரனின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். 

இதே போல் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தூத்துககுடி சுப்ரமணியனுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. 


வீரமரணம் அடைந்த அவர்கள் இருவரின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு  அரசு வேலை வழங்கப்படும் எனவும்  அறிவித்துள்ளார்.

click me!