SEMICON India 2024 | செமிகண்டக்டர் துறையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை பெற்ற இந்தியா!

By Asianet TamilFirst Published Sep 12, 2024, 2:58 PM IST
Highlights

SEMICON India 2024 நிகழ்ச்சியில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உலகளாவிய தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்தார். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா ஒரு உலகளாவிய செமிகண்டக்டர் மையமாக மாறுவதற்கான திறனைக் கொண்டுள்ளது என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். முதலீட்டாளர்கள் உத்தரப் பிரதேசத்தை செமிகண்டக்டர் முதலீடுகளுக்கு ஒரு சிறந்த இடமாகப் பாராட்டினர், மேம்பட்ட சட்டம் ஒழுங்கு மற்றும் ஆதரவான முதலீட்டு சூழலை மேற்கோள் காட்டியுள்ளனர்.
 

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் நடைபெற்ற SEMICON India-2024ன் திறப்பு விழாவில், உலகளாவிய தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் இருவரும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியா ஒரு உலகளாவிய செமிகன்டக்டர் மையமாக மாறுவதற்கான திறனைக் கொண்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

உ.பி., செமிகண்டக்டர் முதலீட்டுகளுக்கு சிறந்த இடம்

முதலீட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், உத்தரப் பிரதேசத்தை செமிகண்டக்டர் முதலீடுகளுக்கு ஒரு சிறந்த இடமாகப் பாராட்டினர். உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பான மற்றும் ஆதரவான முதலீட்டு சூழலை வழங்குவதாக முதலமைச்சர் உறுதியளித்தார். முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தென் கொரியாவின் ஹன்யாங் இன்ஜினியரிங் நிறுவனத்தின் டேஹூன் லீ கூறுகையில், செமிகன்டக்டர் தயாரிப்புகளுக்கு பரந்த வாய்ப்புகளை இந்தியா வழங்குகிறது. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை உலகம் உண்ணிப்பாக கவனித்து வருகிறது. மேலும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், இங்கு செமிகண்டக்டர்களுக்கான நோக்கம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது" என்றார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த கென் உகாவா கூறுகையில், "இந்தியாவில் செமிகண்டக்டர் துறை இப்போது சிறியதாக இருக்கலாம், ஆனால் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன், அது பெரிய அளவில் வளர்ச்சியடைய உள்ளது. இந்த செமிகான் 2024 உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களை ஈர்த்துள்ளது, இது மிகவும் சுவாரஸ்யமானது" என்றார்.

ஜெர்மன் நிறுவனமான விஸ்கோ டெக்கின் பிரதிநிதியான ராகுல், முதல்வர் யோகியின் தலைமையின் கீழ் சட்டம் ஒழுங்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஒப்புக்கொண்டார், இது உத்தரப் பிரதேசத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது. "எங்கள் நிறுவனம் ஆண்டுதோறும் மாநிலத்தில் அதன் முதலீட்டை அதிகரித்து வருகிறது" என்றும் அவர் கூறினார்.

Semicon India 2024 | செமிகண்டக்டர் புரட்சியில் உத்தரப்பிரதேசத்தின் எழுச்சி!

Pinetics நிறுவனத்தின் அலங்கர் தோப்லி கூறுகையில், "வசதிகளை வழங்குவதில் அரசாங்கத்தின் முன்கூட்டிய அணுகுமுறை காரணமாக முதலீடு செய்வது மிகவும் சாதகமாக மாறியுள்ளது. முதல்வர் யோகியின் ஒத்துழைப்பு மற்றும் உறுதிமொழி முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, இது மாநிலத்தில் முதலீட்டை மேலும் அதிகரிக்க உதவும்" என்றார்.

Latest Videos

click me!