
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 2 ரூபாய் 7 காசுகள் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச நிலவரத்தை காரணம் காட்டி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது. கடந்த 6 மாதங்களில் சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது இது 7-வது முறையாகும்.
அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2 ரூபாய் 7 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் விமானங்களுக்கான எரிபொருள் விலை 3 புள்ளி 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.