ராஜ்பாத் முதல் கர்தவ்யா பாதை வரை.. "மேரா யுவ பாரத்".. போர்ட்டலை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி!

Ansgar R |  
Published : Oct 31, 2023, 11:23 PM ISTUpdated : Oct 31, 2023, 11:36 PM IST
ராஜ்பாத் முதல் கர்தவ்யா பாதை வரை.. "மேரா யுவ பாரத்".. போர்ட்டலை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி!

சுருக்கம்

Mera Yuva Bharat Portal : டெல்லியில் மேரி மாத்தி மேரா தேஷ்-அம்ரித் கலாஷ் யாத்ராவின் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்கிழமை 'மேரா யுவ பாரத் போர்ட்டலை' தொடங்கி வைத்து பல்வேறு விஷயங்கள் குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிகழ்வின் போது, ​​ராஜ்பாத்தில் இருந்து கர்தவ்யா பாதை வரையிலான தூரத்தை நாடு கடந்தது என்று பிரதமர் கூறினார். "சர்தார் படேலின் பிறந்தநாளில், கர்தவ்யா பாதையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மகாயக்ஞத்தை அனைவரும் கண்டுகளிக்கிறார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார். தண்டி யாத்திரைக்கு மக்கள் ஒன்று கூடியது போல், ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்வுக்கு மக்கள் ஒன்றுகூடியுள்ளது புதிய சரித்திரம் படைத்தது என்றார் அவர்.

"இப்போது, ​​'கர்தவ்யா பாதை'யில், நமது முதல் பிரதமரின் சிலை உள்ளது. இப்போது, ​​நம் கடற்படைக்கு சத்ரபதி சிவாஜியால் ஈர்க்கப்பட்ட புதிய சின்னம் உள்ளது, இப்போது, ​​அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு பூர்வீகப் பெயர்கள் கிடைத்துள்ளன. இந்த காலகட்டத்தில் தான் 'ஜனதிய கவுரவ் திவாஸ்' மற்றும் 'வீர் பால் திவாஸ்' அறிவிக்கப்பட்டன. காலனித்துவ மனநிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்தோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. வீடு புகுந்து காவலர் சுட்டுக்கொலை - அதிகரிக்கும் தீவிரவாதிகளின் அட்டகாசம்!

அம்ரித் கலாஷ் என்றால் என்ன?

அமிர்த கலசத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் உள்ளது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த நிகழ்வு 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிறைவு மற்றும் நாட்டின் இளைஞர்களுக்கான 'மேரா யுவ பாரத்' (MY பாரத்) தளத்தை அறிமுகப்படுத்தியது.

ஸ்ரீநகரில் இருந்து திருநெல்வேலி வரையிலும், சிக்கிம் முதல் சூரத் வரையிலும், இந்தியாவின் வண்ணங்களும் மண்ணும் கடந்த திங்கள்கிழமை கர்தவ்ய பாதையில் ஒன்றிணைந்ததால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள், பாரம்பரிய ஆடைகளை அணிந்து, 'மேரி மாத்தி மேரா தேஷ்' நிகழ்வை கொண்டாடினர். 

வீடுகள், நிறுவன மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மண், அமிர்த கலசத்தை தாங்கி, சிறியது முதல் பெரிய தொகுதிகள் வரை நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் ஒன்று கூடி, வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை வெளிப்படுத்தி இந்தியாவின் கலாச்சார அதிர்வைக் கொண்டாடினர்.

விஜய் சௌக் மற்றும் கர்தவ்யா பாதையில் நடைபெற்ற நிகழ்வின் போது, ​​700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொகுதிகளைச் சேர்ந்த அம்ரித் கலாஷ் யாத்ரிகள், பார்வையாளர்கள் மத்தியில் கலந்து கொண்டனர். புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜி கிஷன் ரெட்டி, அர்ஜுன் ராம் மேக்வால், அனுராக் தாக்கூர், மீனாட்சி லேகி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், பிரதமர் மோடி மற்றும் பிற தலைவர்கள், பார்வையாளர்களுடன், 'பஞ்ச் பிரான்' உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.

மேரா யுவ பாரத் போர்டல் தொடங்கப்பட்டது

இது இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சியில், அரசாங்கத்தின் கவனத்தை அமைக்கவும், நாட்டின் வளர்ச்சி பாதைக்கு உதவ இளைஞர்களை தயார்படுத்தவும் உதவும். "இந்த தன்னாட்சி அமைப்பின் நோக்கம் இளைஞர்களை சமூக மாற்ற முகவர்களாகவும், தேசத்தை கட்டியெழுப்புபவர்களாகவும் இருக்க ஊக்குவிப்பதே ஆகும். மேலும் அவர்கள் அரசாங்கத்திற்கும், குடிமக்களுக்கும் இடையில் 'யுவ சேது' ஆக செயல்பட இது அனுமதிக்கிறது" என்று மத்திய கலாச்சார அமைச்சகம் கூறியது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

இந்தியாவின் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுவதற்காக மார்ச் 12, 2021 அன்று தொடங்கிய 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற இரண்டு வருட பிரச்சாரத்தின் உச்சக்கட்டத்தையும் இது குறிக்கும்.

இந்திய - மியான்மர் எல்லை.. மறைந்திருந்து தாக்கிய குல்கி போராளிகள்.. SDPO அதிகாரி கொல்லப்பட்ட கொடூரம்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Elephant Clash: யானைகள் மோதலில் சிக்கி சென்னை ஐடி பெண் பரிதாப பலி! சுற்றுலா இடத்தில் நேர்ந்த சோகம்!
Kerala Politics: பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசம்! சுகாதார ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! முதல்வர் அதிரடி!