காங்க்ரா மினியேச்சர் ஓவியம் டூ கின்னௌரி ஷால் வரை - ஜி20 தலைவர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த பரிசுகள் !

By Raghupati RFirst Published Nov 16, 2022, 5:30 PM IST
Highlights

இந்திய பிரதமர் மோடி ஜி20 தலைவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுகளை கொடுத்துள்ளார் அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

இந்தோனேஷியாவின் பாலி நகரில் ஜி20 மாநாடு நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம் ஆகிய தலைப்புக்களின் கீழ் உலக தலைவர்கள் விரிவாக விவாதித்தனர்.  கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பர் 1ம் தேதியில் இருந்து இந்தியா அதிகாரபூர்வமாக ஏற்கிறது.

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டுக்கு வருகை தருமாறு உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு ஏற்கனவே பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.  அதில், ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஜி-20 கூட்டமைப்பை இந்தியா தலைமையேற்று வழிநடத்தும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் கலைகளை எடுத்துரைக்கும் விதமாக உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு பரிசுகளை அளித்தார். அவைகளின் பட்டியலை பார்க்கலாம்.

இதையும் படிங்க..கல்லூரிகளில் ராகிங் கொடுமையா.? கடும் நடவடிக்கை பாயும் - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு !

காங்க்ரா மினியேச்சர் ஓவியங்கள்:

காங்க்ரா மினியேச்சர் ஓவியங்களை அமெரிக்காவுக்கு பரிசாக அளித்தார் பிரதமர் மோடி.  காங்க்ரா மினியேச்சர் ஓவியங்கள் பொதுவாக 'ஷிரிங்கர் ராசா' அல்லது இயற்கையான பின்னணியில் காதல் சித்தரிப்பு என்று கூறப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் காஷ்மீர் ஓவியர்களின் குடும்பம் முகலாய பாணி ஓவியத்தில் பயிற்சி பெற்ற குலேரின் ராஜா தலிப் சிங்கின் அரசவையில் தஞ்சம் புகுந்தபோது, இந்த கலை சிறிய மலை மாநிலமான 'குலேரில்' உருவானதாகும். இந்த நேர்த்தியான ஓவியங்கள் இன்று இமாஞ்சல பிரதேசத்தைச் சேர்ந்த தலைசிறந்த ஓவியர்களால் இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன.

மாதா நி பச்சேடி:

இங்கிலாந்து நாட்டுக்கு மாதா நி பச்சேடியை பரிசாக கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. மாதா நி பச்சேடி என்பது குஜராத்தி மக்களால் செய்யப்பட்ட ஜவுளியாகும். மாதா என்றால், 'தாய் தெய்வம்', 'நி' என்றால் 'சொந்தமானது' மற்றும் 'பச்சேடி' என்றால் 'பின்னணி'. தேவி தனது கதையின் பிற கூறுகளால் சூழப்பட்ட வடிவமைப்பில் மைய உருவத்தை உருவாக்குகிறார் என்று பொருள்படுகிறது. மாதா நி பச்சேடி என்பது வாக்ரிஸின் நாடோடி சமூகத்தால் வடிவமைக்கப்பட்டது ஆகும். இது மாதாவின் பல்வேறு அவதாரங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பித்தோரா:

ஆஸ்திரேலியா நாட்டுக்கு பித்தோரா கலையை நினைவுபடுத்தும் வகையில் பரிசினை அளித்துள்ளார் பிரதமர் மோடி. பித்தோரா என்பது குஜராத்தின் நாட்டுப்புற மற்றும் பழங்குடியினரின் கலை கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது படைப்பாற்றலில் மனிதகுலத்தின் ஆரம்பகால வெளிப்பாடுகளுக்கு முந்தைய வண்ணத்தில் மிகுந்த ஆற்றலின் உணர்வைக் கொண்டுவருகிறது. இந்த ஓவியங்கள் ஆஸ்திரேலியாவின் பழங்குடி சமூகங்களின் பழங்குடியினரின் புள்ளி ஓவியத்தை ஒத்திருக்கிறது.

படன் படோலா துப்பட்டா:

இத்தாலி நாட்டிற்கு படன் படோலா துப்பட்டாவை பரிசாக கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. வடக்கு குஜராத்தின் படான் பகுதியில் சால்வி குடும்பத்தால் நெய்யப்பட்ட (இரட்டை இகாட்) படன் படோலா ஜவுளி மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை பரிசாக தற்போது அளித்துள்ளார் பிரதமர் மோடி. இந்த நேர்த்தியான துப்பட்டாவில் (தாவணி) வைக்கப்பட்டுள்ள உருவங்கள் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட படானில் உள்ள ஒரு படிக்கட்டுக் கிணற்றான ‘ராணி கி வாவ்’ இலிருந்து ஈர்க்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. குஜராத்தின் சூரத் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட மிகவும் திறமையான மரக் கைவினையாகும்.

இதையும் படிங்க..உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா முதல்வரே.? திமுகவை அட்டாக் செய்த பாஜக !

அகேட் கிண்ணம்:

பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அகேட் கிண்ணத்தை பரிசாக கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. குஜராத் அகேட் கைவினைகளுக்கு பெயர் பெற்றது. இது சால்சிடோனிக் - சிலிக்காவால் உருவாக்கப்பட்ட அரை விலையுயர்ந்த கல் ஆகும். ராஜ்பிப்லா மற்றும் ரத்தன்பூரின் நிலத்தடி சுரங்கங்களில் ஆற்றுப்படுகைகளில் காணப்படுகிறது. மேலும், இது பல்வேறு அலங்கார பொருட்களை உற்பத்தி செய்வதற்காக பிரித்தெடுக்கப்படுகிறது. தற்போது கம்பாட்டின் கைவினைஞர்களால் இது உருவாக்கப்படுகிறது. அகேட் கற்களுக்குக் கூறப்படும் குணப்படுத்தும் சக்திகள் இருப்பதாக இன்றளவும் நம்பப்படுகிறது.

வெள்ளி கிண்ணம்:

இந்தோனேசியா நாட்டுக்கு வெள்ளி கிண்ணத்தை பரிசாக அளித்துள்ளார் பிரதமர் மோடி.  தனித்துவமான மற்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கிண்ணம் தூய வெள்ளியால் ஆனது. இது குஜராத்தில் உள்ள சூரத் பகுதியில் உள்ள பாரம்பரிய மற்றும் மிகவும் திறமையான உலோகத் தொழிலாளிகளால் மேம்படுத்தப்பட்ட ஒரு நூற்றாண்டு பழமையான கைவினை ஆகும்.

கின்னௌரி ஷால்:

இந்தோனேசியா நாட்டுக்கு வெள்ளி கிண்ணத்தை மட்டுமல்லாமல், அதனோடு கின்னௌரி ஷாலையும் பரிசாக கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. கின்னௌரி சால்வை, இமாச்சல பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த ஜவுளி வகையை சேர்ந்தவை ஆகும். இதன் வடிவமைப்புகளில் மத்திய ஆசியா மற்றும் திபெத்தின் சாயலை காணலாம். சால்வைகள் வெஃப்ட் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கனல் பித்தளை செட்:

ஸ்பெயின் நாட்டுக்கு கனல் பித்தளை செட்டினை பரிசாக அளித்துள்ளார் பிரதமர் மோடி. இந்த கனல் பித்தளை செட் ஆனது இந்தியாவின் சில பகுதிகளில் இசைக்கப்படுகிறது. இது டதுரா மலரைப் போன்ற ஒரு முக்கிய மணியைக் கொண்டுள்ளது. கிராம தெய்வங்களின் ஊர்வலம் போன்ற சடங்கு நிகழ்வுகளில் இது பயன்படுத்தப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் தலைவர்களை வரவேற்கவும் இது பயன்படுகிறது.

இது லிப் ரீட் இசைக்கருவியாகும். இந்த பாரம்பரிய இசைக்கருவிகள் இப்போது அதிகளவில் அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மற்றும் குலு மாவட்டத்தில் திறமையான உலோகக் கைவினைஞர்களால் தயாரிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க..டெக்ஸ்டர் சீரிஸ்.! புது பிரிட்ஜ்.! வேறொரு பெண்ணுடன் அவுட்டிங்.! கொடூரமாக கொல்லப்பட்ட காதலி

click me!