பிரம்மாண்டம்...பிரம்மாண்டம்...புதிய நாடாளுமன்றத்தின் சிறப்பு வீடியோ வைரல்!!

Published : May 26, 2023, 05:05 PM ISTUpdated : May 26, 2023, 05:32 PM IST
பிரம்மாண்டம்...பிரம்மாண்டம்...புதிய நாடாளுமன்றத்தின் சிறப்பு வீடியோ வைரல்!!

சுருக்கம்

புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி வரும் மே 28ஆம் தேதி திறந்து வைக்கிறார். இந்த நாடாளுமன்றத்தின் சிறப்பு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடம் 150 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்டதாகவும், பூகம்பத்தை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் கட்டடக்கலை பாணிகளை உள்ளடக்கியதாக இந்த நாடாளுமன்றம் இருக்கும். மக்களவை மற்றும் மாநிலங்களவை பெரிய இருக்கைகளை கொண்டிருக்கும். 

புதிய வளாகத்தில் மக்களவையில் 888 பேர் அமர முடியும். ஆனால் பழைய மக்களவையில் 543 பேர் மட்டுமே அமைய முடியும். மாநிலங்களவையில் 384 பேர் அமர முடியும். ஆனால், பழைய மாநிலங்களவையில் 245 பேர் மட்டுமே அமர முடியும். இரண்டு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 1,272 பேர் அமரலாம்.  

நாடாளுமன்றக் கட்டடம் ரூ.971 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்டுள்ளது.  டாடா நிறுவன குழுமம் இந்தக் கட்டடத்தை கட்டியது. 

புதிய நாடாளுமன்றக் 64,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் கட்டடம் `சென்ட்ரல் விஸ்டா' என்ற சிறப்பு பெயரிலும் அழைக்கப்படுகிறது. மக்களவைக் கட்டடம் தேசியப் பறவையான மயிலை கருப்பொருளாகக் கொண்டும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரையைக் கருப்பொருளாகக் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

முக்கிய ராஜபாதையின் குறுக்கே மூன்று சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் இரு பக்கங்களிலும் 16 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 

புதிய நாடாளுமன்றத்தில் 'செங்கோல்' அமைக்கப்பட இருக்கிறது. மக்களவையில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படுகிறது. இது தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோல் ஆகும். வெள்ளியால் ஆன இந்த செங்கோல் மீது தங்க மூலாம் பூசப்பட்டுள்ளது.  உம்மிடிபங்காரு நகைக்கடையினர் இந்த செங்கோலை தயாரித்துக் கொடுத்து இருந்தனர் என்பது சிறப்பாகும்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!