ஆதித்ய தாக்கரேவை நெருங்குகிறதா அமலாக்கத்துறை; மும்பையில் அதிரடி ரெய்டு!!

Published : Jun 21, 2023, 02:27 PM IST
ஆதித்ய தாக்கரேவை நெருங்குகிறதா அமலாக்கத்துறை; மும்பையில் அதிரடி ரெய்டு!!

சுருக்கம்

கொரோனா ஊழல் தொடர்பாக ஆதித்ய தாக்கரேவுக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வால் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா காலத்தில் ஊழல் நடந்ததாக உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவர் ஆதித்ய தாக்கரேவுக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வால் மற்றும் சுராஜ் சவான் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. மேலும் எம்பி சஞ்சய் ராவுத்துக்கு நெருக்கமான சுஜித் பட்கருக்கு சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது.

தானே மற்றும் நவி மும்பையில் இருக்கும் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் தானே நகராட்சி கமிஷனராகவும், மும்பை மாநகராட்சியின் கூடுதல் கமிஷனராகவும் சஞ்சீவ் ஜெய்ஸ்வால் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி மாதம் மும்பை மாநகராட்சி கமிஷனர் ஐஎஸ் சஹலிடம் மருத்துவமனை ஒப்பந்த ஒதுக்கீடுகள் குறித்து அமலாக்கத்துறை வாக்குமூலம் பெற்று இருந்தது. 

'நான் மோடி ரசிகன்..' பிரதமர் மோடியை புகழ்ந்த டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்

இதற்கு முன்னதாக எம்பி சஞ்சய் ராவுத்துக்கு நெருங்கிய நண்பரான சுஜித் பாட்கர் மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு பதிவு செய்து இருந்தது. சுகாதாரத்துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் மும்பையில் கொரோனா தொற்று மருத்துவத்தில் ஈடுபட்டு மருத்துவமனை கான்டிராக்ட் பெற்று இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்து இருந்தது. அதாவது. கொரோனா காலத்தில் மும்பையில் பல்வேறு இடங்களில் தற்காலிக மருத்துவமனை நிறுவி சிகிச்சை அளித்து வந்தனர். இவற்றில் தற்போது ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மைக்ரான் சிப் சோதனை ஆலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?