
அந்தமான் கடலில் புதன்கிழமை காலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. தேசிய நிலநடுக்கவியல் மையத்தின்படி, இந்த நிலநடுக்கம் 75 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. முதல் கட்டத் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கத்தில் பொருள் சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டவில்லை.
நேற்று முன்தினமும் அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 வரை பதிவானது.