பீர் கேன்களுடன் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்... இணையத்தில் வைரலான வீடியோ!!

By Narendran SFirst Published Oct 3, 2022, 7:35 PM IST
Highlights

உ.பி.யில் வகுப்பறையில் பீர் கேன்களுடன் குடிபோதையில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி வந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

உ.பி.யில் வகுப்பறையில் பீர் கேன்களுடன் குடிபோதையில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி வந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், பள்ளி வகுப்பறையில் மது அருந்திவிட்டு கடும் போதையில் பள்ளி ஆசிரியர் கண்டெடுக்கப்பட்டார். சைலேந்திர சிங் கௌதம் என அடையாளம் காணப்பட்ட உதவி ஆசிரியர், DRB இன்டர்கல்லூரியில் வகுப்பின் போது பீர் கேன்களை மறைக்க முயற்சிக்கும் போது, ஊழியர்களை எதிர்கொண்ட போது, தற்போது வைரலான வீடியோவில் காணப்பட்டார்.

இதையும் படிங்க: 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !

வீடியோவில், ஆசிரியர் குடிபோதையில் இருப்பதைக் காணலாம், மேலும் தன்னைத் தற்காத்துக் கொள்வதையும், பீர் கேனை மறைத்து வைத்திருப்பதையும் காணலாம். இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், குடிபோதையில் இருக்கும் ஆசிரியர் பாடம் நடத்தி வருகிறார். இந்த வீடியோ உ.பி. ஹத்ராஸில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு .. என்னென்ன வசதிகள் வரப்போகுது தெரியுமா..? மத்திய அமைச்சர்

குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்களே இப்படிச் செய்தால் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்குமா? இந்த ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உ.பி. போலீஸாரிடம் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்த ஊடக அறிக்கையின்படி, குடிபோதையில் இருந்த ஆசிரியர் சைலேந்திரா என்பதும் அவர், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் மூன்று பேர் கொண்ட குழு இப்போது அவரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

click me!