பலத்த காற்று.. டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்.. பார்வை திறனும் குறைந்ததால் அதிர்ச்சி.

Published : May 16, 2023, 01:31 PM IST
பலத்த காற்று.. டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்.. பார்வை திறனும் குறைந்ததால் அதிர்ச்சி.

சுருக்கம்

டெல்லி நகரம் முழுவதும் பலத்த காற்று வீசியதால், தூசி அதிகரித்து காற்றின் தரம் மோசமாக பாதிக்கப்பட்டது.

தேசிய தலைநகர் டெல்லியில் நேற்றிரவு முழுவதும் பலத்த காற்று வீசியது. இதனால் நகரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.  இதனால் பார்வைத்திறன் 1,000 மீட்டராக குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுகடந்த ஐந்து நாட்களாக வடமேற்கு இந்தியாவில் கடுமையான வெப்பம், மழை இல்லாததால் வறண்டு போன மண் மற்றும் நள்ளிரவில் இருந்து தொடர்ந்து பலத்த காற்று வீசியதே இந்த தூசி நிறைந்த நிலைக்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிகாலை நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 30-35 கி.மீ. வரை இருந்ததாகவும், காற்றின் வேகம் பகலில் மட்டுமே குறையும், இது தூசி படிய அனுமதிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : கர்நாடக வெற்றிக்கு பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிய மம்தா.. காங்கிரஸின் ரியாக்ஷன் இதுதான்..

இந்திய வானிலை மையத்தின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வி.கே.சோனி கூறுகையில், "தூசியின் செறிவு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கன மீட்டருக்கு 140 மைக்ரோகிராமில் இருந்து காலை 4 மணிக்கு 8 மணிக்கு 775 மைக்ரோகிராம் ஆக உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம். அப்பகுதியில் பலத்த காற்று வீசுகிறது. விரைவில் தூசி தணியும்" என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியின் பெரும்பாலான இடங்களில் தூசியின் செறிவு அதிகமாக உள்ளதாகவும், குறிப்பாக இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

இதனிடையே டெல்லியில் புழுதிக்கு ராஜஸ்தானில் ஏற்பட்ட புயல் சுழற்சியே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வடக்கு ராஜஸ்தானில் ஏற்பட்ட சூறாவளி சுழற்சியால் புழுதிப் புயல் மற்றும் லேசான மழை பெய்தது. அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு, இந்த நடவடிக்கையின் தாக்கம் ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளில் கட்டம் கட்டமாக காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களில், டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை கடந்தது. மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

இதையும் படிங்க : கர்நாடக முதல்வர் யார்? காங்கிரஸின் திட்டம் இதுதான்.. இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

PREV
click me!

Recommended Stories

Budget 2026: வருமானத்தை மறைத்தால் 100% அபராதம்.! தவறான தகவல் கொடுத்தால் மொத்த வருமானமும் காலி!
ஆரம்பமே அமர்க்களம்.. சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் அதிவேக ரயில் பாதை