டெல்லியில் கைமீறிப் போற காற்று மாசு.. பகிரங்க மன்னிப்பு கேட்ட அமைச்சர் மன்ஜிந்தர் சிங்!

Published : Dec 16, 2025, 10:07 PM IST
Delhi Minister Manjinder Singh Sirsa. (Photo/ANI)

சுருக்கம்

டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா, தலைநகரில் நிலவும் கடும் காற்று மாசுக்காக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இந்த மோசமான நிலைக்கு முந்தைய ஆம் ஆத்மி அரசே காரணம் எனவுத் குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிய தலைநகரில் நிலவும் கடும் காற்று மாசு நெருக்கடிக்காக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா செவ்வாய்க்கிழமை அன்று பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். மேலும், இது குழந்தைகள் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த மோசமான சூழ்நிலைக்கு முந்தைய ஆம் ஆத்மி (AAP) அரசின் கொள்கைகளே காரணம் என்றும் அவர் திட்டவட்டமாகக் குற்றம் சாட்டினார்.

மன்னிப்புக் கோரிய அமைச்சர்

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சிர்சா, தற்போதைய அரசு மாசு அளவைக் குறைக்க தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

"உயர்ந்து வரும் காற்று மாசுபாட்டிற்காக டெல்லி மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் அதை நாள் ஒன்றுக்கு நாள் குறைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்," என்று அவர் கூறினார்.

"எந்தவொரு அரசும் ஒன்பது முதல் பத்து மாதங்களுக்குள் முழுமையாக மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடியாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆம் ஆத்மி பற்றி கிண்டல்

மாசுப் பிரச்சினைக்காக டெல்லி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி தலைவர்களைக் கிண்டல் செய்த அமைச்சர் சிர்சா, இந்த நெருக்கடியைச் சமாளிக்க அவர்கள் எந்தவொரு பயனுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறிவிட்டார்கள் என்று விமர்சித்தார்.

"அவர்கள் இந்த விவகாரத்தைக் கையாள எதுவும் செய்யவில்லை. ஆனால், இப்போது தாங்கள் உருவாக்கிய ஒரு சூழ்நிலைக்காகப் போராடுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக AQI (காற்றின் தரக் குறியீடு) இதே அளவில்தான் இருந்துள்ளது," என்றும் சிர்சா குற்றம் சாட்டினார்.

குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல்

உயர்ந்து வரும் மாசு குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர், ஆனால் தற்போதைய அரசு அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளித்தார்.

மாசு குறித்து இப்போது கருத்துத் தெரிவிக்கும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகிய காங்கிரஸ் தலைவர்களையும் அவர் விமர்சித்தார்.

"இன்று அவர்கள் முகமூடி அணிவது பற்றி பேசுகிறார்கள். கடந்த ஆண்டு இதே நாளில் AQI 380-ஐச் சுற்றியிருந்தபோது அவர்கள் எங்கே இருந்தார்கள்? அப்போது அவர்கள் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருந்ததால் மௌனமாக இருந்தார்கள்," என்று சிர்சா கேள்வியெழுப்பினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மெட்ரோ வேகமா? ஸ்கூட்டர் வேகமா? பெங்களூரு டிராபிக்கில் ஒரு ஜாலி பந்தயம்!
பீகாரில் தவறுதலாக ஆண்களுக்குச் சென்ற ரூ.10,000.. திருப்பித் தரமால் தண்ணி காட்டும் கிராமவாசிகள்!