டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் வேண்டும்.. அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு !!

Published : Dec 07, 2022, 06:32 PM IST
டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் வேண்டும்.. அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு !!

சுருக்கம்

டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமரின் ஆசீர்வாதம் வேண்டும் என்று டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு பேசியுள்ளார்.

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வெற்றி பெற்றுள்ளது. சுமார் 15 வருட பாஜகவின் கோட்டையை தகர்த்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது ஆம் ஆத்மி. டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள், இந்த வெற்றியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க..இந்திய பெருங்கடலில் நுழைந்த சீன உளவு கப்பல்.! இன்னொரு பக்கம் இந்திய ஏவுகணை - மீண்டும் பரபரப்பு !!

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்குப் பிறகு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியை வெற்றி பெற வைத்த டெல்லி மக்களுக்கு முதலில் தனது நன்றியைத் தெரிவித்தார். தேசிய தலைநகரின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்பட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க..நாங்க பொண்ணு தரவேமாட்டோம்.! இளைஞர்களின் திருமணத்தில் மண்ணை அள்ளிப்போட்ட ‘ஈக்கள்’ - இப்படியொரு கிராமமா ?

தொடர்ந்து பேசிய அவர், “அனைத்து வேட்பாளர்களுக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து செயல்பட பாஜக மற்றும் காங்கிரஸை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இனி பாஜக கவுன்சிலர் இல்லை. நீங்கள் டெல்லி கவுன்சிலர்கள். எங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை. டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் தேவை என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

இதையும் படிங்க..2026ல் முதல்வர்.! பிரதமர் வேட்பாளர் நீங்க தான் அண்ணா.! போற போக்கில் பாஜகவில் பூகம்பத்தை கிளப்பிய சூர்யா சிவா !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருத்தப்பட்ட வந்தே மாதரம் தான் தேசப் பிரிவினைக்கு காரணமா? அமித் ஷா பேச்சால் சர்ச்சை
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!