டெல்லி விபத்து எப்படி நடந்தது? பிரதமரிடம் கூறிவிட்டு மருத்துவமனைக்கு ஓடோடி சென்ற அமித்ஷா.!

Published : Nov 10, 2025, 10:01 PM IST
amit shah

சுருக்கம்

டெல்லி செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து NIA, NSG உள்ளிட்ட பல விசாரணை முகமைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

இன்று (திங்கள்கிழமை) மாலை செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்து டெல்லி நகரை அதிர்ச்சி அடையச் செய்தது. இந்த வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். வெடிவிபத்தின் தாக்கத்தில் அருகிலிருந்து மூன்று வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.

டெல்லி செங்கோட்டை விபத்து

மாலை 6.55 மணிக்கு டெல்லி தீயணைப்பு துறைக்கு அழைப்பு வந்தது. உடனே 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. இதுபற்றி கூறிய சாட்சிகள், “ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டு, முழு இடமும் அதிர்ந்தது. பல வாகனங்கள் சேதமடைந்தன” என்று கூறினர்.

பிரதமர் மோடி – அமித் ஷா அவசர ஆலோசனை

வெடிவிபத்துக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் பேசினார். நிலைமையைப் பற்றி நேரடி தகவல் பெற்றார். இதுபற்றி கூறிய அமித் ஷா, “மாலை 7 மணிக்கு டெல்லி செங்கோட்டை அருகே வெடி விபத்து ஏற்பட்டது. பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன உயிரிழந்துள்ளனர். தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள் டெல்லி குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்றன. NIA மற்றும் FSL குழுக்கள் தற்போது விசாரணை தொடர்கிறது. அருகிலுள்ள CCTV காட்சிகள் பரிசீலிக்கப்படுகின்றன” என்று கூறினார்.

விசாரணை தீவிரம்

வெடிவிபத்து ஒரு மெதுவாக நகரும் வாகனத்தில் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வெடிப்பின் சக்தி மிகுந்ததால் அருகிலிருந்து கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்தன. தேசிய விசாரணை முகமை (NIA), தேசிய பாதுகாப்பு படை (NSG), மற்றும் தடயவியல் ஆய்வகம் (FSL) குழுக்கள் சம்பவ இடத்தில் விசாரணையில் ஈடுபட்டுள்ளன. சம்பவ இடத்தில் பல வாகனங்கள் முழுமையாக எரிந்து சிதறியுள்ளன. சில சாட்சிகள் கூறினார், "என் முன் ஓடிய ஸ்விஃப்ட் கார் திடீரென வெடித்தது. சில நொடிகளில் தீ பரவியது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களை சந்திக்கும் அமித் ஷா

வெடிவிபத்துக்குப் பிறகு அமித் ஷா, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (LNJP) மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். வெடிவிபத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பரிதாபாத் பகுதியில் உள்ள காஷ்மீரி மருத்துவரின் வீட்டில் 360 கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சம்பவத்துடன் டெல்லி வெடிவிபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மொத்தத்தில், டெல்லி செங்கோட்டை வெடிவிபத்து நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசு உச்ச மட்டத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!