கொரோனா தடுப்பூசி போட்டால்….. செல்போன், டிவி பரிசு… அட்டகாச அறிவிப்பு

Published : Oct 18, 2021, 08:16 AM IST
கொரோனா தடுப்பூசி போட்டால்….. செல்போன், டிவி பரிசு… அட்டகாச அறிவிப்பு

சுருக்கம்

கொரோனாவுக்கான தடுப்பூசியை செலுத்தி கொண்டால் செல்போன், டிவி பரிசாக தரப்படும் என்று மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசியை செலுத்தி கொண்டால் செல்போன், டிவி பரிசாக தரப்படும் என்று மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பணிகள் முன்பை விட வேகம் எடுத்துள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்வதின் அவசியம் பற்றி மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

தங்களின் சவுகரியத்துக்கு ஏற்ப அவ்வப்போது மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசுகளை அறிவித்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக மணிப்பூர் அரசு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

வரும் 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் நடக்க உள்ளன. அதில் கலந்து கொண்டு தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசுகளை அறிவித்துள்ளது.

அதன்படி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பவர்களுக்கு கவர்ச்சிக்கர பரிசுகள் தரப்படுகின்றன. கலர் டிவி, செல்போன், பெட்ஷீட் உள்ளிட்டவை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுதவிர கூடுதல் போனசாக ஆறுதல் பரிசுகளும் தரப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

உலக சாதனையுடன் களமிறங்கும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: ரயில்வே வாரியம் அதிரடி ஒப்புதல்!
75+ Happy Eid Ul-Adha Wishes in Tamil: குடும்பம், நண்பர்கள் என அனைவருக்கும் மனம் கவரும் வாழ்த்துகள்